தேடி வந்த வாய்ப்பு… அஜித் படத்தை நிராகரித்த சுந்தர் சி.. அட கடவுளே..என்ன காரனம் தெரியுமா.?

0
Follow on Google News

அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் துணிவு. இந்த படத்தை முடித்துவிட்டு அஜித் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே அஜித் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகி இருந்த விக்னேஷ் சிவன், படத்திற்கான முழு ஸ்கிரிப்ட் மட்டும் திரைக்கதை எழுதும் வேலை, லொகேஷன் தேர்வு போன்ற பணிகளை செய்து வந்தார்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது, சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் கதை அஜித்துக்கும் பிடிக்கவில்லை லைக்கா நிறுவனத்திற்கும் பிடிக்கவில்லை, இதனால் அஜித் நடிக்கும் புதிய படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக எந்த இயக்குனர் அஜித் படத்தை இயக்கப் போகிறார் என்று பெரும் போட்டி நிலவிய நிலவியது.

படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் தமிழ் திருமேனிக்கு கிடைத்துள்ளது, ஆனால் இந்த படத்தை இயக்குவதற்காக பல முன்னணி இயக்குனர்கள் லைக்கா நிறுவனத்தை தொடர்பு கொண்டு கடுமையாக முட்டி மோதியுள்ளார்கள். அந்த வகையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் தரணி போன்ற இயக்குனர்களும் லைக்காவை தொடர்பு கொண்டு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை கேட்டுள்ளார்கள்.

ஆனால் சுந்தர் சி யை தொடர்பு கொண்டு அஜித் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு உங்களுக்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்கான கதையை தேர்வு செய்யுங்கள் என சுந்தர் சியிடம் தயாரிப்பு நிறுவனமே நேரடியாக கேட்டுள்ளது. ஆனால் சுந்தர் சி அஜித்திற்கு ஏற்றார் போல் என்னால் கதையை தயார் செய்ய முடியாது, மேலும் தன் கைவசம் தற்போது அதிக படங்கள் இருக்கிறது என்று தெரிவித்து அஜித் பட வாய்ப்பு தேடி வந்தும் நிராகரித்து விட்டாராம் சுந்தர் சி