கோபத்தை கட்டுப்படுத்த அஜித் எடுக்கும் விசித்திரமான பயிற்சி என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் குறித்து இதுவரை யாரும் அறிந்திராத திடுக்கிடும் தகவல் ஓன்று வெளியாகி உள்ளது. நடிகர் அஜித் குமார் ஒரு விசித்திரமான நடிகர் என்று கூட சொல்லலாம், அவரை எளிதில் யாரும் நெருங்கிவிட முடியாது, அந்த அளவுக்கு அவரை தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில் தன்னை வைத்துக்கொண்டுள்ளார். சினிமாவில் அவரை திரையில் மட்டுமே பார்க்க முடியும் மற்ற படி பெரும்பாலும் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார்.

நடிகர் அஜித்குமார் அதிகம் கோபம் அடைய கூடியவர் என்று கூறப்படுகிறது, மேலும் தனது கோபத்தை கட்டுப்படுத்த சில பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அஜித். அதாவது, அஜித் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் சுமார் மூன்று அல்லது நான்கு நாட்கள் யாருடன் பேசாமல் அமைதியாக அந்த அறையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு தேவையான உணவு போன்றவைகள் மட்டும் அவர் இருக்கும் அறையின் வெளியில் வைத்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. அஜித் உணவு சாப்பிட பின்பு பாத்திரங்களை வெளியில் வைத்து விடுவார் என்றும், இதே போன்று சுமார் மூன்று முதல் நான்கு நாட்கள் தனி அறையில் இருக்கும் அஜித்குமார்.

இந்த நான்கு நாட்களில் வெளியில் என்ன நடக்கிறது, என்கிற எந்த ஒரு தகவலும் அவருக்கு தெரியாது, மேலும் அவர் தனி அறையில் இருக்கும் நாட்களில் யாருடனும் பேசமாட்டார் என கூறப்படுகிறது. இப்படி தான் தனது கோபத்தை கட்டுப்படுத்த தனி அறையில் இருந்து இதை ஒரு பயிற்சியாக எடுத்து வருகின்றவர் நடிகர் அஜித்குமார் என சமீபத்தில் சினிமா துறையை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் தெரிவித்தது குறிப்பிடதக்கது.

நடிகர் அஜித் மிக தீவிர கடவுள் நம்பிக்கை கொண்டவர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வரக்கூடியவர் அஜித். அதேபோன்று இந்தியா முழுவதும் உள்ள பழமை வாய்ந்த புகழ்பெற்ற கோவில் திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றவர் அஜித். தன்னுடைய காதல் மனைவி பிரசவத்திற்கு முன்பும் பிரசவத்திற்குப் பின்பும் திருப்பதி ஏழுமலையானிடம் தன்னுடைய மனைவி ஆரோக்யத்துடன் இருக்க சுவாமி தரிசனம் செய்து வந்தவர் அஜித். அந்த அளவுக்கு தீவிர கடவுள் பக்தி கொண்ட அஜித் எப்பொழுதுமே கோவிலுக்கு தன் மனைவியுடன் செல்லாமல் தனியாகவே சென்று வழிபட்டு வருகின்றார்.