என் நண்பனின் உயிரை காவு வாங்கிய மது… இனி மதுவே குடிக்க மாட்டேன்… அஜித் எடுத்த சபதம்…

0
Follow on Google News

நடிகர் அஜித்குமார் அவருடைய நட்பு வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் ஒரு நண்பர் கூட்டம் இருக்காது, விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் மட்டுமே அவருடைய நெருங்கிய நண்பர்கள். குறிப்பாக அவருடைய நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் ஒரு அதிகபட்சம் 10 நபர்களுக்குள் தான் இருப்பார்கள். அந்த வகையில் அஜித்தை நெருங்குவதே மிகப்பெரிய கடினம் என பேசப்பட்டு வரும் நிலையில், அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் யார் யார் என்பது கூட வெளியில் பரவலாக தெரியாது.

அந்த அளவுக்கு தன்னுடைய நண்பர்களை கூட வெளி உலகத்துக்கு காட்டி கொள்ளாமல் ஒரு வித்தியாசமான வாழ்க்கை வாழ்ந்து வரும் அஜித், அதே போன்று அவருடைய நண்பர்களும் அஜித் எங்களுடைய நெருங்கிய நண்பர் என வெளியில் காட்டி கொள்ள மாட்டார்கள். இந்நிலையில் இப்படி அஜித்துக்கு விரல் விட்டு என்ன கூடிய நண்பர்களில் ஒருவர் தான் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி.

வெற்றிக்கும் நடிகர் அஜித்குமார் இடையிலான நட்பு மிக ஆழமானது. நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்குவதற்காக முதன் முதலில் கதை சொல்ல அஜித்தை சந்திக்கிறார் வெற்றி, அப்போது தொடங்கிய இவர்களின் நட்பு அஜித்தை வைத்து வெற்றி துரைசாமி படம் ஏதும் இயக்கவில்லை என்றாலும் கூட, அவர்களுடைய நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பாக அஜித்துடன் இணைந்து பைக் பயணம் செல்வது, மேலும் அஜித் வெற்றி நெருங்கிய நண்பர்கள் என்பதை தாண்டி, இரண்டு குடும்பத்தினருமே நெருங்கி பழகும் அளவிற்கு குடும்ப நண்பர்களாக இருந்து வந்தனர். அந்த வகையில் தற்பொழுது அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு இல்லை என்றால், ஒருவேளை வெற்றியின் இந்த சுற்றுலா பயணத்தில் அஜித்தும் கூட சென்றிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

அப்படி அஜித் இந்த முறை வெற்றி துரைசாமியுடன் சுற்றலா சென்று இருந்தால் ஒரு வேலை அது பாதுகாப்பான பயணமாக அமைந்து வெற்றி துரைசாமிக்கு இப்படி ஒரு துயரம் நடத்திருக்காது என்று உறுதியாக சொல்லலாம். காரணம் , அஜித் உலகம் முழுவதும் பைக், கார் பயனம் மேற்கொண்டாலும் கூட, பாதுகாப்பை கருத்தில் கொண்டு பயணிக்க கூடியவர், அதாவது பைக் , கார் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அஜித் இருக்க கூடியவர்.

இந்நிலையில் அஜித் – வெற்றி இருவருமே சுற்றுலாவுக்கு அதிகம் விரும்பி சென்று ஒரு தனி உலகத்தில் வாழ்வது போன்று உணரகூடிவார்கள். தன்னுடைய நண்பர் வெற்றி துரைசாமி இழப்பிற்கு படப்பிடிப்பு அனைத்தையும் ஓரமாக வைத்துவிட்டு ஓடோடி வந்த நடிகர் அஜித் மற்றும் அவருடைய மனைவி ஷாலினி மிக நீண்ட நேரம் வெற்றி துரைசாமி இல்லத்தில் தன்னுடைய நண்பன் வெற்றியின் உடல் வரும் வரை காத்திருந்து அவருக்கு மரியாதை செலுத்தி வந்தனர்.

அஜித்திற்கு வெற்றி துரைசாமி மறைவு என்பது மிகப்பெரிய ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு, காரணம் அஜித் மிக நெருங்கி பழக கூடிய நண்பர்களில் முக்கியமானவர் வெற்றி. அத நேரத்தில் அஜித்துக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்த வெற்றி துரைசாமி போன்று அஜித்தின் விரல் விட்டு என்ன கூடிய நண்பர்களின் ஒருவர் ஆர்ட் டைரக்டர் மிலன் . இவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.

மிலனும் அஜித்தும் மாலை நேரங்களில் ஒன்றாக அமர்ந்து மது அருந்த கூடிய அளவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். ஆனால் நண்பர் மிலன் மறைவுக்கு மதுவும் ஒரு காரணம் என்பதை அறிந்த அஜித், நண்பர் மிலன் மறைவில் இருந்து மது அருந்துவதையே நிறுத்தி விட்டார் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இப்படி ஒரே வருடத்தில் இரண்டு நண்பர்களை இழந்து மிக பெரிய சோகத்தில் முழ்கியுள்ளார் அஜித் குமார்.