நள்ளிரவில் நடிகையின் டார்ச்சர் தாங்க முடியமால் அஜித் எடுத்த அதிரடி முடிவு..! என்ன செய்தார் அஜித் தெரியுமா.?

0
Follow on Google News

அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் அஜித் குமார், சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் பட வாய்ப்புகளுக்காக அவர் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. வசந்த் இயக்கத்தில் அஜித் நடித்த ஆசை திரைப்படம் ஒரு நடிகருக்கான அங்கிகாரத்தை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து காதல் கோட்டை, காதல் மன்னன், அமர்க்களம், வாலி, தீனா என அஜித் நடித்த இந்த படங்கள் அவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்து சென்றது.

அஜித் ஒரு வித்தியாசனமான மனிதர், சினிமாவில் உச்சகட்ட நடிகர்களாக இருந்து வரும் ரஜினி, விஜய், கமல் ஆகியோருக்கு சினிமா துறையில் நெருக்கமாக பழக கூடிய சில நபர்கள் இருக்கும். மேலும் இவர்கள் பற்றிய பல தனிப்பட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்து கொண்டே இருக்கும், ஆனால் சினிமா வட்டாரத்தில் அஜித் நெருங்கி பழகும் வகையில் யாரும் இல்லை. மேலும் அஜித் குறித்த சினிமா தவிர்த்து எந்த ஒரு தனிப்பட்ட தகவல்கள் மற்ற நடிகர்கள் போன்று வெளியாவது கிடையாது.

அஜித் மிகவும் கோவம் பட கூடியவர். எதையும் நேரடியாக பேச கூடியவர். எந்த ஒரு சூழலிலும் தான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்காதவர், என்று அவரை பற்றி சொல்லி கொண்டே சொல்லலலாம். அஜித் நடித்த படங்களில் பைக் காட்சிகளில் மட்டும் ரிஸ்க் எடுப்பார். மற்ற காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிக்க மாட்டார். ஆனால், அஜித் திரையில் தோன்றினால் போதும், என அஜித்தை திரையில் காண்பதற்கே அவருக்கென ரசிகர் கூட்டம் உண்டு.

இந்நிலையில் அஜித் ஒரு படத்தில் நடிக்கும் போது, தவிர்க்க முடியாத சூழலில் அந்த படத்தில் பணியாற்றும் நபர்களிடம் நெருக்கி பழகும் சூழல் உருவாகும்.ஆனால் தொலைபேசி என் யார் கேட்டாலும் அஜித் தரமாட்டார் என்று கூறப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணத்தினால், படத்தில் தன்னுடன் நடிக்கும் நடிகை மற்றும் படத்தின் இயக்குனரிடம் மட்டுமே தன்னுடைய தொலைபேசி என்னை பரிமாறி கொள்வர் அஜித் குமார் என்று கூறப்படுகிறது.

நடிகர் அஜித்தை பொருத்த வரை இயக்குனரிடம் கதை கேட்டு கதை பிடித்திருந்தால் இயக்குனரை தேர்வு செய்வதுடன் நிறுத்தி கொள்வார். மற்ற டெக்னீஷன், நடிகைகள், துணை நடிகர்கள் என இதில் எதிலும் தலையிடமாட்டார். இயக்குனர் யாரை தேர்வு செய்கிறாரோ, அவருடைய விருப்பத்திற்கே விட்டுவிடுவார். ஆனால் இதற்கு முன்பு தன்னுடன் நடித்த நடிகர் மற்றும் நடிகைகளை அவருக்கு பிடிக்க வில்லை என்றால், அவர்கள் மீண்டும் படத்தில் இடம் பெற்றால் அவர்களை வேண்டாம் என்று இயக்குனரிடம் திட்டவட்டமாக தெரிவித்து விடுவார் அஜித்.

இந்நிலையில் அஜித் ஒரு படம் நடித்து மற்றொரு படம் நடிக்கும் போது, இதற்கு முன்பு அவருடன் ஜோடியாக நடித்த நடிகைகள் சிலர் மீண்டும் அஜித் உடன் நடிக்க வாய்ப்பு கேட்டு அடிக்கடி டார்ச்சர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் நள்ளிரவில் கூட மீண்டும் அஜித் உடன் நடிக்க வாய்ப்பு கேட்டு தொலைபேசியில் அழைத்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அஜித் நடித்த படங்களை இதற்கு முன்பு இயக்கிய இயக்குனர்கள் மீண்டும் பட வாய்ப்பு கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சார்.. ப்ளீஸ் சார் என்று தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இது போன்ற தொந்தரவுகளை விரும்பாத அஜித். ஒவ்வொரு படம் முடியும் போது, தன்னுடைய தொலைபேசி என்னை மாற்றி விடுவார் அஜித் என்றும். இதனால் அவரை எளிதில் யாரும் தொடர்பு கொள்ள முடியாது என்றும் கூறப்படுகிறது. மேலும் யாருடனாவது அஜித் படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக பேசும்போது, அவர்கள் அஜித்திடம் யாருக்காவது சிபாரிசு செய்தால், அவர்களுடன் பேசுவதை அஜித் நிறுத்திவிடுவார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேசையும் விட்டு வைக்காத விக்னேஷ் சிவன்..! நயன்தாரா அதிரடி