Dont Tuch me… யோகிபாபுவை அவமானப்படுத்திய அஜித்… நடந்ததை அப்படியே சொன்ன யோகிபாபு…

0
Follow on Google News

வலைப்பேச்சு என்கின்ற சேனலில் உட்கார்ந்து கொண்டு சினிமா தொடர்பான தகவல்களை வெளியிட்டு வரக்கூடிய அந்தணன் பிஸ்மி அயோர், யோகிபாபு மிகவும் தலைகனத்துடன் இருப்பது போன்றும் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும் இயக்குனரும் படாத பாடுபட்டு வருகிறார்கள், கால்ஷீட் கொடுத்துவிட்டு படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடிக்கிறார், என்றெல்லாம் யோகி பாபுவை எந்த அளவிற்கு டேமேஜ் செய்ய முடியுமா அந்த அளவுக்கு இதற்கு முன்பு டேமேஜ் செய்திருந்தார்கள்.

இதனை தொடர்ந்து யோகி பாபு ஒரு வீடியோ ஒன்றில் பேசுகையில், அதாவது வலைப்பேச்சு சேனலை குறிப்பிடாமல் ஒரு பிரபல சேனல் ஒன்று இருக்கு, அவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே மக்களும் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் டுபாக்கூர் என்பது தெரிந்து கொள்ள வேண்டும். தன்னை பற்றி அவர்கள் பேசியதும், நான் உடனே அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இப்படி எல்லாம் பேச வேண்டாம்.

நீங்களும் சினிமாவில் தான் இருக்கிறீர்கள் என்று யோகி பாபு கேட்க, அதற்கு அவர்கள் நீங்க எங்களை கவனிக்கவே மாட்டேன் என்கிறீர்கள் என்று தன்னிடம் அவர்கள் தெரிவித்ததாகவும், இதன் பின்பு நான் என்ன சொல்வது, நானும் சுமார் 24 வருடங்களாக சினிமாவில் போராடி வந்து கொண்டிருக்கிறேன், ஏன் இப்படி பண்ணுகிறேன் என்று எந்த ஒரு சேனல் பெயரை குறிப்பிடாமல் யோகி பாபு தெரிவித்து இருந்தார்.

உடனே இதற்கு பதிலடி தரும் வகையில் வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் ஆகியோர் யோகி பாபு நாங்கள் அப்படி சொன்னோம் என்றால் கோவிலில் சத்தியம் செய்யவாரா.? என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக பேசியவர்கள், இதில் உச்சகட்டமாக நடிகர் ஒரு முறை யோகி பாபு அஜித்தை தொட்ட போது அதற்கு அஜித் தட்டி விட்டு எங்களை எல்லாம் தொடக்கூடாது என்று சொன்னதாக, யோகி பாபு வலைப்பேச்சு பிஷ்மியிடம் சொன்னதாக ஒரு தகவலை தற்போது வலைப்பேச்சு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யோகி பாபு இதற்கு முன்பு அஜித் குறித்து பேசிய வீடியோவை வைரலாகி வருகிறது. அதில் அஜித்துடன் இரண்டு படங்கள் நடித்துள்ளேன். ஆனால் அஜித் சார் படத்தில் நடிப்பதற்கு முன்பு துணை இயக்குனர்களிடம் அஜித் சார் உடன் ஒரு சீனாவது நான் நடிக்கணும் என்று கேட்டேன். ஆனால் உடனே ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு சின்ன காட்சியில் தான் அஜித் சாரோட நடித்தேன், அஜித் சார் உடனே என்னை கட்டிப்பிடித்தார்.

அப்போது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. அந்த அளவுக்கு ஒரு இயல்பான நடிகர் அஜித் சார். அதே மாதிரி வேதாளம் படம் பண்ணும் போதும் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் அஜித், விஜய் சாருடன் ஒரு காட்சி இரண்டு காட்சி நடித்தாலே எனக்கு போதும் என்று நினைக்கிறேன் என யோகி பாபு பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அப்படி இருக்கையில் எப்படி அஜித் தொடும் போது கையை தட்டி விட்டதாக யோகி பாபு வலைப்பேச்சு குழுவினரிடம் பேசி இருப்பார்.

அதனால் எது உண்மை யோகி பாபு செல்வது உண்மையா.? அல்லது வலைப்பேச்சு குழுவினர் சொல்வது உண்மையா என்கின்ற விவாதம் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. அதே நேரத்தில் எந்த ஒரு பின்புலம்பும் இல்லாமல் சினிமாவில் கடுமையாக கஷ்டப்பட்டு இன்று பிசி நடிகராக வலம் வரும் யோகி பாபு ஒரு நடிகரே இல்லை, அவர் குப்பை என்றெல்லாம் வலைப்பேச்சு செயல்வதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

யோகி பாபுவை மக்கள் ஏற்று கொண்டு விட்டார்கள், அவர் குப்பையா இல்லை கோபுரமா.? என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள், இடையில் இவர்கள் யார் யோகிபாபுவுக்கு சான்றிதழ் தருவதற்கு என பலரும் வலைப்பேச்சு குழுவினரை வறுத்து எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.