அஜித் என்ன பெரிய அஜித்.. நான் இருக்கேன்..களத்தில் இறங்கிய விஜய் சேதுபதி..

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் துணிவு. இந்த படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருந்தார், இந்த படம் சுமார் 8 மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டு. இந்த புதிய படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. படத்தில் அஜித் கமிட் ஆவதற்கு முன்பே விக்னேஷ் சிவனிடம் கதையை கேட்டுவிட்டு தான் கமிட் ஆயிருந்தார்.

அந்த வகையில் புதிய படத்திற்கான படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த படத்தை முடித்துவிட்டு அஜித் பைக்கில் ஒரு வருடம் உலகம் முழுவதும் சுற்றிவர இருப்பதாக திட்டமிட்டிருந்த நிலையில் படப்பிடிப்பை விரைவில் முடித்து விட வேண்டும் என ஏற்கனவே விக்னேஷ் அவனிடம் தெரிவித்திருந்தார் அஜித்.

துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஜனவரி மாதம் அஜித் விக்னேஷ் சிவன் படம் தொடங்க இருந்த நிலையில். பல்வேறு காரணங்களால் அந்தப் படத்தின் தேதி தள்ளி சென்றே போனது. பிப்ரவரி முதல் வாரத்தில் அஜித் – விக்னேஷ் சிவன் படம் தொடங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில். விக்னேஷ் சிவனை நேரில் அழைத்து முழு கதையை கேட்ட அஜித் திடீரென்று எனக்கு இந்த படத்தின் கதை பிடிக்கவில்லை என்று ஒரே போடாக போட்டார் அஜித்.

விக்னேஷ் சிவன் எவ்வளவோ கன்வின்ஸ் செய்ய முயற்சித்தும் அஜித் பிடிவாதமாக இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று உறுதியாக இருந்ததால், அஜித்ன் புதிய படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டு வேறு ஒரு இயக்குனர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.இதனால் விக்னேஷ் சிவன் மிகப்பெரிய சோகத்தில் இருந்து வரும் இந்த நிலையில், சினிமா துறையை சேர்ந்த பலரும் விக்னேஷ் சிவனை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் விக்னேஷ் சிவனை நடிகர் விஜய் சேதுபதி தொடர்பு கொண்டு அஜித் உங்களை வெளியேற்றினால் என்ன அதற்கெல்லாம் வருத்தப்படாதீர்கள், நான் இருக்கிறேன் உங்களுக்காக நான் கால்ஷீட் நான் தருகிறேன் என்று விஜய் சேதுபதி தாமாகவே முன்வந்து விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.. ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் மற்றும் காற்று வாக்கில் இரண்டு காதல் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக வெற்றியை பெற்றிருந்தது. அந்த வகையில் மீண்டும் விஜய் சேதுபதியுடன் விக்னேஷ் சிவன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவன் லவ் டுடே படத்தின் ஹீரோ பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதற்கு கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

விஜய் சேதுபதி தானாக முன்வந்து விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பதற்கு முன் வந்தாலும் விக்னேஷ் வேண்டாம் என்று வேறு ஒரு நடிகரை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் தற்போது விஜய் சேதுபதிக்கு சினிமாவில் மார்க்கெட் இல்லை என்பது தான். இந்த நிலையில் ஏற்கனவே அஜித் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டு தன்னுடைய இமேஜ் மிகப்பெரிய அளவில் டேமேஜ் ஆகி உள்ளதை உணர்ந்த விஜய் சேதுபதி.

மீண்டும் ஒரு மார்க்கெட் இழந்த ஒரு நடிகரை வைத்து படம் எடுத்து அந்த படம் சரிவர போகவில்லை என்றால் தன்னுடைய சினிமா கேரியர் மிகப்பெரிய கேள்விக்குறி ஆகி விடும் என்கிற ஒரு அச்சத்தில் தான் விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதனை கமிட் செய்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் விஜய் சேதுபதி கைவசம் தற்பொழுது எந்த ஒரு படமும் பெரிதாக இல்லாத காரணத்தினால் தான் விக்னேஷ் சிவனுக்கு கால் சீட் கொடுக்க தாமாகவே முன் வந்ததாக கூறப்படுகிறது.