விஜய் மாதிரி ரசிகர்களை ஏமாற்றும் பொழப்பு நமக்கு வேண்டாம்… அஜித் போட்ட அதிரடி உத்தரவு…

0
Follow on Google News

நடிகர் அஜித் துணிவு படத்தின் வெற்றியை அடுத்து, இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் நடிகர்கள் அருண் விஜய் , அர்ஜுன் தாஸ், ரெஜினா கசந்திரா உள்ளிட்ட பிரபலங்களும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீண்ட கால இழுபறிக்கு பிறகு, தொடங்கப்பட்ட விடாமுயற்சியின் சூட்டிங் இப்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. ஆகவே தீபாவளிக்கு கூட ஓய்வில்லாமல் படக்குழு சூட்டிங் எடுத்து வருகின்றனர்.அதுமட்டுமில்லாமல், படம் குறித்த வேறு எந்த அப்டேட்களும் வெளிவராமல் இருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.

இவ்வாறு விடாமுயற்சியின் படப்பிடிப்பு ஓய்வில்லாமல் முழு வீச்சில் எடுக்கப்படுவதற்கும், படத்தைப் பற்றிய ஒரு அப்டேட் கூட வெளிவராமல் இருப்பதற்கும் காரணம் நடிகர் அஜித் தான் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கூடவே, சில கண்டிஷன்களையும் போட்டிருக்கிறாராம்.நடிகர் அஜித் கண்டிஷன்கள் போட்டதற்கு காரணம் விஜயின் லியோ படம் தான் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அதாவது, நடிகர் விஜயின் லியோ படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர், க்லிம்ப்ஸ் மற்றும் லிரிக் வீடியோ என லியோவிற்கு ஏகப்பட்ட அப்டேட்கள் வெளியிடப்பட்டன. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விட்டது. ஆனால், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த ரசிகர்கள் ரிலீஸ் ஆனதும் ஏமாற்றமே அடைந்தனர்.

லியோ படத்தை ஆஹா ஓஹோ என்றெல்லாம் ஹைப்பை ஏற்றி கடைசியில் தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் திருப்தி அடையாமல் நெகட்டிவ் விமர்சனங்களை வாரி இறைத்து வந்தனர். இதனாலேயே நடிகர் அஜித் இப்போது விடாமுயற்சி படத்தைப் பற்றிய அப்டேட் மற்றும் புகைப்படங்கள் எதையும் வெளியிட வேண்டாம் என்று பட குழுவுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.மேலும், படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் மற்றும் படம் வெற்றி பெறும்.

இதற்கிடையில் தேவையில்லாமல் படத்தின் அப்டேட் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் செயல் விடா முயற்சி படத்தில் இருக்கக் கூடாது என்பதை அஜித் கரராக தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே நடிகர் அஜித் துணிவு படத்தை அடுத்து கிட்டத்தட்ட ஒரு வருடமாக ரசிகர்களை காக்க வைத்திருந்தார். ஒருவழியாக இப்போது விடா முயற்சி சூட்டிங் தொடங்கி இருப்பதால், முழு வீச்சில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரசிகர்களுக்கு படத்தை வெளியிட வேண்டும் என்றும் பட குழுவும் நடிகர் அஜித்தும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது