சினிமாவுக்கு குட் பை சொல்லும் அஜித்… தேம்பி தேம்பி அழும் அஜித் ரசிகர்கள்.. எங்கே செல்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிக்கும் துணிவு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது, ஆனால் அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட இந்தியா என பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் தற்பொழுது பாங்காங்கில் பைக்கில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சென்னையில் இன்று துணிவு படத்தின் படப்பிடிப்பு மவுண்ட் ரோட்டில் நடைபெற்றது. இதில் அஜித் கலந்துகொள்கிறார் என்கின்ற ஒரு செய்தி பரவியதை தொடர்ந்து, மவுண்ட் ரோட்டில் அஜித்தை காண ரசிகர்கள் பெருமளவில் குவிந்தனர். ஆனால் அஜித் நடிக்கும் காட்சிகள் அஜித் போன்று வேறு ஒருவரை டூப் போட்டு படமாக்கப்பட்டு வந்தது. இருந்தும் அந்த டூப் மனிதரின் புகைப்படத்தை அஜித் புகைப்படம் என பலர் பகிர்ந்து வருவது குறிப்பிடதக்கது.

அஜித் தற்பொழுது பாங்காக்கில் இருப்பதால், வருகிற 19ஆம் தேதி தான் சென்னை திரும்புகிறார் என்கின்ற ஒரு உறுதியான தகவலும் வெளியாகி உள்ளது. ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து முடித்த பின்பு அடுத்து அஜித்குமார் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கான இடத்தை தேர்வு செய்யும் வேலை மற்றும் படத்தில் முழு ஸ்கிரிப்ட் எழுதி தயாராக இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

லைக்கா தயாரிக்கும் அஜித் 62 வது படமான விக்னேஷ் சிவன் படத்தை முடிந்து விட்டு, அடுத்து 63வது படத்தை தயாரிப்பது யார் என்கின்ற ஒரு தகவல் பரவலாக வருகிறது. அஜித்தின் மங்காத்தா படத்தை தயாரித்த மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி தான் அஜித்தின் 63வது படத்தை தயாரிக்க இருப்பதாக கூட தகவல் வெளியானது. ஏனென்றால் மங்காத்தா படத்தில் அஜித் நடிக்கும் போது இரண்டு படத்திற்கு துரை தயாநிதி தயாரிப்பில் நடிக்க இருப்பதாக அஜித் உறுதியளித்துள்ளார்.

மேலும் துரை தயாநிதி குடும்பத்துடன் அஜித் நெருங்கி பழகி வரக்கூடியவர். பொதுவாக சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித்குமார், மதுரையில் நடந்த துரை தயாநிதி திருமணம் நிகழ்வில் கலந்து கொண்டார் அந்த அளவுக்கு துரை தயாநிதி உடன் நெருக்கமானவர் அஜித். இந்நிலையில் மீண்டும் துரை தயாநிதி தயாரிப்பில் அஜித் நடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கம் அஜித் 62 ஆவது படத்தை முடித்துவிட்டு சினிமாவுக்கு குட் பாய் சொல்ல இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகிறது. அஜித் 62வது படத்தை முடித்துவிட்டு சுமார் ஒன்றரை வருடம் சினிமாவில் நடிப்பதற்கு பிரேக் விட்டு பைக்கில் உலகம் முழுவதும் சுற்றுவதற்கு முடிவு செய்துள்ளார், அதற்காக ஒரு மூன்று பேர் கொண்ட ஒரு குழுவையும் தயார் செய்துள்ளார் அஜித்.

அதற்கான வேலைகளை தற்போது செய்து வருவதாகவும், ஒன்றரை வருடத்தில் பல நாடுகளை சுற்றி வர இருக்கும் அஜித்குமார், மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பது, அப்போதைய அவருடைய சூழல் தான் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் படத்தை முடித்துவிட்டு அஜித் சினிமாவுக்கு குட்பை சொல்ல இருக்கும் தகவல் அறிந்து, அஜித் ரசிகர்கள் தேம்பி தேம்பி அழுது வருவது குறிப்பிடத்தக்கது.