அஜித்திடம் இருந்து வந்த அழைப்பு… நான் ரெம்ப பேசி என கெத்து காட்டும் திரிஷா….

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படத்தை முடித்துவிட்டு அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்த நிலையில், படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு கதை பிடிக்கவில்லை என அஜித் நடிக்கும் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்ற பட்டு, அவருக்கு பதில் இயக்குனர் மகிழ் திருமேனி கமிட்டானார்.

இந்நிலையில் ஏற்கனவே விக்னேஷ் சிவனிடம் ஏற்பட்ட பிரட்சனை மீண்டும் வந்து விடக்கூடாது என்பதால், இயக்குனர் மகிழ்திருமேனி முழு கதையை தயார் செய்த பின்பு தான் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பதில் அஜித் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே நட்சத்திர ஓட்டலில் தங்கி முழு கதையும் தயார் செய்து அஜீத்துக்காக காத்திருந்தார் மகிழ் திருமேனி.

ஆனால் அஜித் கதையை கேட்ட உடனே படத்தின் அடுத்தகட்ட வேலைகள் தொடங்கும் என தகவல் வெளியான நிலையில், கதை கேட்பதில் இழுத்தடித்து கொண்டிருந்தார் அஜித், இந்நிலையில் பைக் பயணம் முடித்துவிட்டு, ஒரு வழியாக அஜித் முழு கதையும் கேட்டு கதை ரொம்ப பிடித்து இருக்கு என ஓகே செய்துவிட்டார், அதனை தொடர்ந்து விடாமுயற்சி படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனமும் மகிழ் திருமேனியிடம் கதையைக் கேட்டு ஓகே செய்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்டமாக படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிகைகள் தேர்வுகளில் இறங்கியுள்ளார். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பது பற்றி நடிகை திரிஷாவிடம் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் திரிஷாவுக்கு அட்வான்ஸ் ஏதும் கொடுக்காமல் உறுதி செய்யாமல் இருந்து வந்தனர், அந்த வகையில் விடாமுயற்சி படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பது வெறும் பேச்சு அளவில் மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் அட்வான்ஸ் தொகை கொடுக்காமல் கால்சீட் உறுதி செய்ய வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்து வந்தார் திரிஷா.

அதே நேரத்தில் விடாமுயற்சி தரப்பினர் அட்வான்ஸ் கொடுத்து கமிட் செய்யாமல் காலம் தாமதம் செய்து வந்தால், வேறு கம்பெனிக்கு கால் சீட் கொடுக்கலாம் என்கிற முடிவில் திரிஷா இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், ஐசரி கணேசன் தயாரிப்பில் கௌரவ நாயக் இயக்கத்தில் ஹீரோயின் சப்ஜெக்ட் படத்திற்கு நடிகை திரிஷாவிடம் பேசப்பட்டு, கதையை கேட்ட திரிஷா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருப்பதால் உடனே விடாமுயற்சிக்கு கொடுப்பதாக இருந்த கால் சீட்டை இந்த படத்திற்கு கொடுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது விடாமுயற்சி படத்தின் கதையை அஜித் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் ஓகே செய்துள்ள நிலையில், தற்போது திரிஷாவை இந்த படத்தில் நடிக்க வைப்பதற்கான இறுதி கட்ட பேச்சு வார்த்தைக்கு விடாமுயற்சி தரப்பு முயற்சி செய்தபோது, அதற்கு திரிஷா இப்போதைக்கு வாய்ப்பு இல்லை நான் ரெம்ப பிசி என தெரிவித்து விட்டாராம்.

இந்த நிலையில் இப்ப இருக்கும் பிசியில் அஜித்தே சென்று த்ரிஷாவிடம் பேசினாலும் கால்ஷீட் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் நடிகர் அஜித் அடுத்தடுத்து இரண்டு பைக் பயணம் மேற்கொண்டு விடாமுயற்சி படம் மேலும் தாமதமானால் அதற்குள் கௌரவ நாயுடு இயக்கும் நடிக்கும் படத்தை திரிஷா முடித்துவிட்டு விடாமுயற்சி படத்திற்கு கால் சீட்டு கொடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் விடாமுயற்சி படம் இனியும் தாமதம் செய்வதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது, மேலும் நடிகர் அஜித் ஏற்கனவே பைக் பயணம் என்று இழுத்து அடித்து விட்டதால் , விடாமுயற்சி திரைப்படத்தை அஜித் ஒரே செட்டில் முடித்துக் கொடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.