அஜித் பைக் ரைட் பற்றி சர்ச்சைக்குறிய வகையில் பேசிய பிரபல… கோபத்தில் அஜித் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் முதல் முதலில் தெலுங்கு சினிமாவில் தான் ஹீரோவாக அறிமுகமவதாக இருந்துள்ளது. அஜித் நடித்த தெலுங்கு படத்தின் இயக்குனர் படப்பிடிப்பின் போது ஆற்றில் கேமரா வைத்து காட்சிகள் எடுக்கப்பட்ட போது, ஆற்றில் தவறி விழுந்து மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அஜித் ராசியில்லாத நடிகர் என முத்திரை குத்தப்பட்டு அங்கிருந்து வாய்ப்பு இல்லாமல் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

அஜித் ராசியில்லாத நடிகர் என்று சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு இருந்தாலும் கூட. தயாரிப்பாளர் சோழ பொன்னுரங்கம் தமிழில் அமராவதி படத்தில் நடிகர் அஜித்தை அறிமுகம் செய்து வைத்தார். அஜித்தை அமராவதி படத்தில் அறிமுகம் செய்த சோழ பொன்னுரங்கத்திடன் பலர் சார்.. வேண்டாம், இவர் ராசியில்லாத நடிகர் என தெரிவிக்க,அதெல்லாம் பொருட்படுத்தாமல் அஜித்தை அமராவதி படத்தில் அறிமுகம் செய்து வைத்தார் சோழ பொன்னுரங்கம்.

அமராவதி படம் நல்ல ஹிட் கொடுத்தது. இதன் பின்பு அடுத்தடுத்து அஜித்துக்கு பட வாய்ப்பு கிடைத்தது. ஒரு தயாரிப்பாளர் ஒரு நடிகரை அறிமுகம் செய்து வைத்து அந்த நடிகர் எதிர்காலத்தில் உச்சத்துக்கு வந்தாலும், உரிமையோடு எந்த நேரமும் நேரில் சந்திக்கு உரிமை அறிமுகம் செய்து வைத்த அந்த தயாரிப்பாளருக்கு உண்டு. ஆனால் தற்பொழுது சோழ பொன்னுரங்கம் எளிதாக அஜித்தை சந்திக்க முடியாத தூரத்தில் இருக்கிறார்.

மேலும் படம் தயாரிக்க முடியாத நிலையில் தான் சோழ பொன்னுரங்கம் தற்போது இருக்கிறார். அவருக்கு ஒரு படம் நடித்து கொடுத்து அவருக்கு நன்றி உணர்வுடன் அஜித் இருந்திருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அஜித் நிச்சயமா சோழ பொன்னுரங்கம் போன்டர்வர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்திருப்பார், ஆனால் அதை வெளியில் தெரியாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் பற்றி மற்றொரு விஷயம் வெளியில் வந்துள்ளது. அஜித் எதையும் நேரடியாக பேச கூடியவர், மேலும் அதிக கோபப்பட கூடியவர். ஒரு கால கட்டத்தில் அஜித் கார் ரேஸ் , பைக் ரேஸ் என தீவிரமாக இருந்த பொது பிரபல திரைப்படம் தயாரிப்பாளர் KR அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது. நடிகர் அஜித்தை நம்பி கோடி கணக்கில் முதலீடு செய்து படம் எடுக்கிறார்கள், ஆனால் அவர் கார் ரேஸ், பைக் ரேஸ் என அவர் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்,

இந்த நிலையில் நடிகர் அஜிக்கு விபத்து ஏற்பட்டு எதாவது ஓன்று நடந்து, படப்பிடிப்பு தடைபட்டால், அதனால் ஏற்பட்டும் நஷ்டம் பற்றி அஜித் நினைத்து பார்க்க வேண்டும் என KR பேசியிருந்தார். இதற்கு அஜித் அப்போது மிக காட்டமாக பதில் கொடுத்திருந்தார், கண்ட நாய் எல்லாம் அட்வைஸ் பண்ண வேண்டாம் என அஜித் தெரிவித்தது, சினிமா வட்டாரத்தில் பெரும் சல சலப்பை ஏற்படுத்தியது.

இப்படி யாருக்கு பயம் கொள்ளாமல் துணிவுடன் பேசும் அஜித், ஒரு முறை தயாரிப்பாளர்களுக்கு பெப்சி ஊழியர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையின் போது, நியாயம் பெப்சி ஊழியர்கள் பக்கம் தான் இருக்கிறது என அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதனால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் AM ரத்தினம் தயாரிப்பில் அஜித் நடிப்பதற்காக கொடுத்த அட்வான்ஸ் பணத்தை பெப்சி ஊழியர்களுக்கு ஆதரவாக அஜித் குரல் கொடுத்தார் என்பதற்காக அட்வான்ஸ் தொகையை திரும்பி வாங்கி சென்றார் AM ரத்தினம் என கூறப்படுகிறது. எப்படி துணிச்சலாக பல போராட்டங்களை எதிர்கொண்டு தான் இன்று பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள அஜித் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு பொது விவகாரங்களில் தலையிடுவது இல்லை என்பது குறிப்பிடதக்கது.