பெண்களை காம வெறியுடன் பார்ப்பவரா அஜித்குமார்.? ப்ளூ சட்டை மாறன் சர்ச்சை கருத்து..என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது, பிரபல திரைப்பட விமர்சகர் தமிழ் டாக்கீஸ் ப்ளூ சட்டை மாறன், வலிமை படத்தை விமர்சனம் செய்துள்ளது கடும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அந்த படத்தில் நடித்த நடிகர் அஜித்குமாரை உருவ கேலி செய்து மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்திருந்தார், அஜித் நடனம் ஆடுவது பரோட்டாவிற்கு மாவு பிசையும் வகையில் உள்ளது என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு சினிமா துறையை சேர்ந்த பலர் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர், மேலும் அஜித் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்ததாவது. ஒருவர் எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என கடந்த நான்கு நாட்களாக பல யூட்யூப் சேனல்களில் பேட்டி அளித்து வரும் பத்திரிக்கையாளர்களே, கோடம்பாக்க கோமகன்களே, துக்கடா செலப்ரிட்டிகளே..

திரைப்படத்தின் கொண்டாட்டம் என்பது பொதுமக்களுக்கு எவ்வித தொந்தரவும் தராமல் இருக்க வேண்டும். உடமைகளை சேதப்படுத்தவோ, களவாடவோ கூடாது. ஆனால் அதிகாலை இரண்டு மணிமுதல் முக்கியமான சாலைகளில் குவிந்து, போக்குவரத்துக்கு இடையூறு செய்து, வெறித்தனமாக கூச்சல் இடும் உரிமையை
யார் தந்தது? குழந்தைகளுக்கு பெருமளவில் பயன்படும் பால் பாக்கெட்டுகளை அப்பாவி வியாபாரியின் வண்டியில் இருந்து திருடி செல்வது என்ன வகையான நாகரீகம்?

கூச்சலிட்டும், திருடியும் சட்டம் ஒழுங்கை மீறும் இவர்களை வன்மையாக கண்டித்து உங்களில் எத்தனை பேர் பேட்டி அளித்துள்ளீர்கள்? முதலில் இதற்கு வாயை திறக்கவும். பிறகு விமர்சன பாடம் எடுக்கலாம். இல்லாவிட்டால் இப்படியான அநாகரீக ரசிக மனோபாவத்தை வளர்ப்பதில் உங்களுக்கும் கணிசமான பங்குண்டு என்றே பொருள். மேலும் உருவ கேலி குறித்து பாடம் எடுக்கும் பிரபலன்களே,

ரெட் படத்தில் வரும் ஒல்லிக்குச்சி உடம்பு காரி பாடலில் ஸ்லிம்மாக இருக்கும் கதாநாயகியை பார்த்து அஜித் பாடுவது என்ன ரகம்? மெல்லிய தேகக்காரி, ஸ்லிம்மான உடம்புக்காரி என்று வர்ணிக்காமல் ஒல்லிக்குச்சி, குண்டு என்று பிறரின் உருவத்தை கேலி செய்யும் வரிகள் கொண்ட பாடலை பாடியபோது நீங்கள் எங்கே சென்றீர்கள்? ‘இதே பாடலில் ‘நான் சமைஞ்சதும் சாமி வந்து உன் காதில் சொல்லிச்சிதானே?’ எனும் வரியும் உண்டு. நாம் வணங்கும் சாமிக்கு இதுதான் வேலையா?

மேலும் சில ஆபாச வரிகள்… பழுத்தாச்சி. நெஞ்சம் பழம் பழுத்தாச்சி. அணில் கிட்ட குடுத்தாச்சி. அணில் இப்ப துள்ளலாம். அப்பப்ப பல்லும் பதிக்கலாம்’ பெண்களின் மார்பத்தை காம வெறியுடன் பார்ப்பவன் கண்ணிற்கு மட்டுமே இப்படி எழுத தோன்றும். அதில் நடிக்க தோன்றும். இது வெறும் கற்பனை பாடல் அல்ல. ஆணாதிக்க மனோபாவத்தை வளர்ப்பதில் உங்களுக்கும் கணிசமான பங்குண்டு என்றே பொருள் என ப்ளூ சட்டை மாறன் பதிலளித்துள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணி மனைவி – சினேகன் இடையே விரிசல்..! சலித்து விட்டதா சினேகனுக்கு திருமண வாழ்க்கை.?