அஜித்தை கழுவி கழுவி ஊத்திய இயக்குனர்… பணத்திற்கு கொடுக்கும் மரியாதை கூட மனுசனுக்கு இல்லையா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. பெரிதாக ரசிகர்களை சந்திப்பதில்லை என்றாலும் இன்றளவிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அஜித்தையும் அவரது படங்களையும் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

இப்படி தமிழ் சினிமாவில் ரசிகர்களையும் புகழையும் சம்பாதித்து வைத்த அஜித், பெரும்பாலும் மீடியாக்களில் இருந்து ஒதுங்கியே இருப்பார். அதுமட்டுமில்லாமல் படத்தின் அடித்துக் கொடுப்பதோடு சரி, படத்தின் ப்ரோமோஷன், இசை வெளியீட்டு விழா போன்ற எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். ஆனாலும், அவரது படங்கள் கோடிக்கணக்கில் வசூலை குவிப்பதில் தவறவிடுவதில்லை.

ஒரு பக்கம் சினிமா, மற்றொரு பக்கம் பைக்கில் உலக சுற்றுலா என தனக்கு பிடித்த பாதையில் வாழ்க்கையை அனுபவித்து வரும் அஜித், அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் சில தயாரிப்பாளர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஏற்கனவே, பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் “அஜித் தனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை ..நான் செய்த உதவியை மறந்து..துரோகம் செய்து விட்டான்” என்று அஜித்தை கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் தங்கர்பச்சானும் அஜித் பற்றிய தனது ஆதங்கத்தை மேடை ஒன்றில் கொட்டி தீர்த்துள்ளார். அதாவது, “இப்போது உள்ள சினிமாவெல்லாம் மாறிப்போச்சு. ஆடியன்ஸ்க்கு கொலை பண்ற படம்னா தான் பிடிக்குது. இப்போது சினிமாவில் வர்றவங்க எல்லாம் பொறுக்கியும் திருடன்ளுமாகவே வராங்களே ..மக்கள் தானே நீங்கள் கோடி கணக்கில் சம்பளம் வாங்குவதற்கு காரணம் ..அந்த மக்களுக்கு நீங்க என்னையா திருப்பி செஞ்சீங்க ..?எங்க மக்களையே சொரண்டி திங்கிறவங்கள பத்தி நாங்க பேச கூடாதா? என்று ஆவேசமாக பேச தொடங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்னைக்கு எல்லாரும் அஜித்த பத்தி மத்த பிரபலங்கள் கிட்ட கேக்குறீங்க ..ஆனால், அஜித் கிட்ட போய் தங்கர்பச்சான் பத்தி கேளுங்களேன் ..ஏன் என்ன பத்தி கேக்க மாட்டீங்க ..என்ன பத்தி மட்டும் இல்ல..வேற யாரையாவது பத்தி கேளுங்க ..அவருக்கு யாரைப் பத்தியும் தெரியாது. என்ன ஒரு வேற ஒரு கிரகத்துல வாழ்கிற வேற்று கிரகவாசி. வேற ஒரு கோள்ல வாழ்ந்துட்டு இருக்கிறார் “.

“சினிமால தானே பேரு புகழ் பணம் எல்லாத்தையும் சம்பாதிச்சாரு. ஆனா, உச்சத்தை எட்டியதும் எல்லாத்தையும் மறந்துடறாங்க .. நடிகர் அஜித் தயாரிப்பாளர்களை சந்திக்க மாட்டார். உடல் உழைப்பு போட்டு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தியேட்டர்ல கொடுத்து, எத்தனை பேர் அவர் படத்தை வந்து பார்க்கிறான்? ரசிகர்கள் பாக்குறதுனால தானே இவர்கள் எல்லாம் கோடி கணக்குல சம்பாதிக்கிறாங்க ..

அந்த ரசிகர்களையும் வந்து பாக்குறது இல்ல. தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்கள் வேணாம். ..
ஆனா அவங்களால கடைக்குற கோடி கோடியான பணம் வேணும். இதுதான் அவரோட ஒரே குறிக்கோள்” என்று இயக்குனர் தங்கர்பச்சான் அஜித்தின் செயல்களைப் பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார்.இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்கர் பச்சானின் பேச்சுக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இணையவாசிகள் பலர் உண்மையைத்தானே சொல்லி இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.