கோபத்தில் அஜித் .. அஜித்தின் புதிய படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விரட்டியடிப்பு.! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை சுமாரான வசூலை பெற்றாலும். கடும் விமர்சனத்துக்கு உள்ளானது வலிமை திரைப்படம். இந்த படம் தொடர்ந்து இரண்டு வருட காத்திருப்புக்கு பின் வெளியானதால், வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வலிமை படத்தின் நஷ்டத்தை சரி செய்வதற்காக மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வருகிறார்.

இந்த படத்தை வலிமை படத்தின் இயக்குனர் H.வினோத் இயக்குகிறார். நடிகர் அஜித் எப்போதும் ஒரு படம் முடிந்த பின்பு தான் அடுத்த படத்தை பற்றிய முடிவை எடுப்பார், ஆனால் வலிமை படம் திரைக்கு வந்த பின்பு அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். அந்த வகையில் தற்பொழுது H. வினோத் நடிப்பில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் அஜித் குமார்.

ஒரு வரி கதையை மட்டும் கேட்டு இயக்குனர் மீது இருக்கும் நம்பிக்கையில் படத்தில் நடிக்க ஓகே சொல்லும் முன்னணி நடிகர்கள் படம் சமீபத்தில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில். நடிகர் ரஜினிகாந்த நடிக்கும் புதிய படத்தின் முழு ஸ்கிரிப்ட் ஏற்பாடு செய்து தன்னிடம் கொடுக்க புதிய படத்தின் இயக்குனர் நெல்சனிடம் வலியுறுத்தியுள்ளார் ரஜினிகாந்த். தற்பொழுது அதே பார்முலாவை பின்பற்ற தொடங்கியுள்ளார் அஜித்குமார்.

தற்பொழுது H.வினோத் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் அஜித் குமார், நேரில் விக்னேஷ் சிவனை அழைத்து புதிய படத்துக்கான முழு ஸ்கிரிப்ட் தயார் செய்து தன்னிடம் சமர்ப்பிக்க வலியுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து படத்தின் முழு ஸ்கிரிப்ட் தயார் செய்து விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளார். ஸ்கிரிப்ட் படித்து பார்த்த அஜித் செம்ம டென்ஷனில் விக்னேஷ் சிவனை நேரில் அழைத்துள்ளார்.

தன்னிடம் சொன்ன ஒன் லேன் கதையும், முழு கதையும் வேறு மாதிரி இருந்துள்ளது. படத்தின் பெரும் பகுதி அரசியல் சார்ந்து இது அரசியல் படம் போன்று இருந்ததை பார்த்து. தான் அரசியல் சார்ந்து படத்தில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த கதை வேண்டாம். வேறு ஒரு கதையை தயார் செய்து எடுத்துட்டு வாங்க என விக்னேஷ் சிவனிடம் வலியுறுத்தியுள்ளார் அஜித். இதனை தொடர்ந்து வேறு ஒரு கதையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில்.

அந்த கதையும் அஜித்துக்கு பிடிக்காத பட்சத்தில். தற்பொழுது H.வினோத் இயக்கத்தில் நடிக்கும் படம் முடிந்த உடன் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் அஜித் நடிப்பதாக இருந்த விக்னேஷ் சிவன் கதையை ஏற்கனவே, நடிகர் விஜய் சந்தித்து இதே கதையை விக்னேஷ் சிவன் சொன்னதாகவும், ஆனால் இந்த கதையை விஜய் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

நள்ளிரவில் நடிகையின் டார்ச்சர் தாங்க முடியமால் அஜித் எடுத்த அதிரடி முடிவு..! என்ன செய்தார் அஜித் தெரியுமா.?