அஜித்தை வெளியேற்றுங்க… கோபத்தில் கொந்தளித்த மணிரத்தினம்… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

அஜித் – விஜய் இருவரும் தற்பொழுது போட்டியாளராக இருந்தாலும் ஆரம்ப காலங்களில் இருவரும் மிகவும் நட்போடு இருந்து வந்துள்ளார்கள். அஜித், விஜய் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்கிற படத்திலும் நடித்துள்ளார்கள்.ஆனால் இந்த படம் மிகவும் சுமாரான படமாகவே இருந்ததால், அஜித் விஜய் இருவரும் இணைந்து அப்படி ஒரு படம் நடித்ததே பலருக்கும் தெரியாது.

இந்த நிலையில் அஜித் – விஜய் இருவரும் ஒரு கட்டத்தில் பிசி நடிகராக உருவெடுத்த பின்பும் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைத்தது, அப்படி இருவரும் இணைந்து நடிக்க வேண்டிய படம் தான் நேருக்கு நேர். நேருக்கு நேர் திரைப்படத்தில் ஆரம்பத்தில் விஜய் மற்றும் அஜித் நடிப்பதாக இருந்தது. இதில் நேருக்கு நேர் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது.

படப்பிடிப்பும் தொடங்கியது நேருக்கு நேர் படத்தில் அஜித் நடிக்கும் காட்சிகள் சுமார் 10 நாள்கள் படமாக்க பட்டது.அஜித்தும் நேருக்கு நேர் படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஷூட்டிங் எல்லாம் நடந்து கொண்டிருந்த அந்த சமயத்தில் தான் அவர் காதல்கோட்டை என்ற ஹிட் படத்தை கொடுத்திருந்த அஜித் மிகவும் பிசியாக பல படங்களில் ஒரே நேரத்தில் கமிட்டாகி நடித்து வந்துள்ளார்.

ஆனால் அஜித் அதற்கு முன்பு வெளியான ஆசை படத்தின் இயக்குனரும் வசந்த் என்பதால், ஆசை படத்தில் எப்படி அஜித்தை ட்ரீட் செய்தாரோ அதே போன்று தான், நேருக்கு நேர் படத்திலும் அஜித்தை ட்ரீட் செய்துள்ளார் வசந்த்.இதனை தொடர்ந்து அஜித்துக்கும் அந்த படத்தின் இயக்குனர் வசந்த் க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் வசந்த் இயக்கும் நேருக்கு நேர் படத்தில் இருந்து வெளியாகிவிடலாம் என முடிவு செய்துள்ளார் அஜித்.

இதனை தொடர்ந்து அஜித் – வசந்த இருவருடைய பஞ்சாயத்து நேருக்கு நேர் படத்தின் தயாரிப்பாளர் மணிரத்தினம் கவனத்துக்கு சென்றுள்ளது. அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த அஜித்தை வந்து என்னை நேரில் பார்க்க சொல்லுங்க நான் பேசுறேன் ஏன் இயக்குனர் வசந்த்திடம் மணிரத்தினம் தெரிவிக்க. மணிரத்தினம் அஜித்தை சந்திக்க இருக்க தகவல் அஜித்திடம் தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்புக்காக மதியம் 1 மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் பிக்ஸ் செய்யப்படுகிறது.

அஜித் மதியம் ஒரு மணி அளவில் வந்து தயாரிப்பாளர் மணிரத்தினத்தை அலுவலகத்தில் சந்திப்பார் என காத்திருக்கிறார் மணிரத்தினம். 1 மணிக்கு அஜித் வரவில்லை, இருந்தாலும் வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் தற்போது ஒரு பிசி நடிகராக அஜித் இருப்பதால் பரவால்ல காத்திருப்போம் என அஜித்துக்காக காத்திருக்கிறார் மணிரத்தினம், 2 மணி ஆச்சு அஜித் வரவில்லை, இரண்டரை மணி ஆச்சு அஜித் வரவில்லை.

உடனே தன்னுடைய அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி வந்த மணிரத்தினம் இயக்குனர் வசந்தை அழைத்து நேருக்கு நேர் படத்திலிருந்து அஜித்தை உடனே தூக்கி விட்டு வேறு ஒரு நடிகரை போடுங்க என தெரிவிக்கிறார். அதற்கு மணிரத்தினத்திடம் சார் பத்து நாள் வரை அஜித்தை வைத்து படப்பிடிப்பு நடத்திவிட்டோம் என வசந்த் தெரிவிக்க அந்த படத்தின் தயாரிப்பாளர் நான் தானே, அந்த பணமெல்லாம் என்னோடது தானே, பரவாயில்லை அஜித்தை இந்த படத்தில் இருந்து தூக்கி விடுங்கள் என மணிரத்தினம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.இதன் பின்பே அஜித்துக்கு பதில் நடிகர் சூர்யா நேருக்கு நேர் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.