ஊருக்கு போக அஜித்துக்கு காசு இல்லை… நான் கொடுத்து அனுப்பினேன்… ஆனால் என்னிடமே பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டார்…

0
Follow on Google News

பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அஜித்தை நார் நாராக கிழித்து தொங்க விட்டுள்ளது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அஜித் தன்னிடம் பல லட்சம் கடன் வாங்கி ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார். பணத்திற்கு ஈடாக ஒரு படம் செய்வதாக அஜீத் உறுதியளித்தார். ஆனால் பல வருடங்களாகியும் இந்த வாக்குறுதியை அஜித் காப்பாற்றவில்லை என மாணிக்கம் நாராயணன் குற்றம் சாட்டினார்.

அதேபோல் தன்னுடைய அப்பா, அம்மா ஊருக்கு போக பணம் இல்லாமல் திணறியபோது அஜித் என்னிடம் வந்துதான் பணம் வாங்கி சென்றார். அவர் மானஸ்தனாக இருந்தால் தன்னிடம் வாங்கிய பணத்தை கொடுக்க வேண்டும் என்றும் 1996ல் அஜித் பணம் வாங்கியதாக மாணிக்கம் நாராயணன் கூறியிருப்பர். அப்போது அஜித் அவ்வளவு பெரிய நட்சத்திரம் இல்லை. அஜீத் படத்திற்கு தேதி கொடுப்போம் என்ற நம்பிக்கையில் நீண்ட நாட்களாக சென்றார். ஆனால் தேதி கொடுக்கவில்லை என்றும் பணத்தை திருப்பி தரவில்லை என்றும் மாணிக்கம் நாராயணன் குற்றம் சாட்டினார்.

மேலும் “பத்திரிக்கையாளர்களை அழைத்து 10, 20 ஆயிரம் கொடுத்து, அஜித்துக்கு நிகரான நல்லவர் உலகில் யாரும் இல்லை என எழுத பிரியாணி போட்டார். அஜித் பிரியாணி ஏன் பெரிய செய்தியாக்கப்பட்டது? இந்த செய்தியை படிக்கும் முட்டாள்கள் அஜித் பிரியாணி செய்ததாக கூறி கொண்டாடுகிறார்கள்.என அஜித் ரசிகர்களை விளாசிய மாணிக்கம் நாராயணன்.

உங்கள் சொந்த வாழ்க்கையை வாழுங்கள். படம் வந்ததும் போய்ப் பார்க்க வேண்டும். வாழ்க்கை ஏன் அஜித்தின் பின்னால் செல்கிறது? படத்தைப் போய்ப் பாருங்கள். எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு வையுங்கள். மனைவி மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள் “ என அஜித் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த மாணிக்கம் நாராயணன். மேலும் அஜித் மாபெரும் நடிகர். வாழ்க்கையில் அவர் நடிப்பார். ஆனால், படத்தில் அவருக்கு நடிக்க தெரியாது.

சும்மா வந்து அப்படி இப்படி என்று தொந்தியை வந்து கொண்டு நடிப்பார் அவ்வளவுதான். அவன் ஜென்டில்மேன்னா? உங்களை நீங்களே அப்படி சொல்லிக் கொள்ளக்கூடாது. மரியாதையை விலை கொடுத்து வாங்க கூடாது. ஆனால், விஜய் பொறுத்தவரை அவருக்கு தன்னடக்கம் உண்டு. அவர்தான் பெரிய ஆள் என்பது போல எல்லாம் பேசவே மாட்டார். இந்தியா முழுக்க பிரமோஷன் செய்ய வேண்டும் என்று சொன்னால் கூட அவர் செய்வார். விஜய் உடன் டீல் செய்வது ரொம்பவும் ஈசி. அவருக்கு எந்த விஷயத்தையும் பேசி புரிய வைத்துவிடலாம். விஜயை பார்க்கவே முடியவில்லை என்று யாராவது சொல்கிறார்களா?

சிலரெல்லாம் படம் நடித்ததோடு சென்றுவிடுவார்கள். அவன் எல்லாம் பைத்தியக்காரன். ஒரு படத்தில் நடிக்கிறாய். அந்த படத்தை பட குழுவோடு சேர்ந்து ப்ரமோஷன் செய்வதை விட உனக்கு என்ன பெரிய வேலை. அப்படி என்ன ஹீரோ நீ? உன்னை படங்களுக்கு புக் செய்யக்கூடாது. ரஜினி சார், கமல் சார் ப்ரொமோஷனுக்கு வருகிறார்கள். நீ என்ன அவர்களை விட பெரிய ஆளா? என்று கடுமையாக அஜித் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்து பேசி இருக்கிறார்.

மேலும் என்னிடம் கடன் வாங்கியதற்காக அஜித்தை விமர்சிப்பதல்ல எனது நோக்கம். அவர் என்னிடமிருந்து கடன் வாங்கினார் என்பதை அவர் ஒப்புக்கொள்ள மறுப்பதும், அதைப் பற்றி என்னுடன் பேச விரும்பாததும் தான் எனக்கு இருக்கும் முக்கியமான கவலை என்று கூறியுள்ள மாணிக்கம் நாராயணன், அஜித்தின் மனைவி ஷாலினி ஒரு காலத்தில் தனது நல்ல தோழியாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர் அஜீத் குமார் மீது இதுபோன்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்து திரையுலகில் உள்ள ஒரே நபர் மாணிக்கம் நாராயணன் மட்டுமே. பல ஆண்டுகளாக நாராயணன் இந்தக் குற்றச்சாட்டுகளை பலமுறை திரும்பத் திரும்பச் சொன்னாலும், அஜித் இந்த குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை.