மனிதாபிமானம் இல்லாமல் மயில்சாமி மரணத்தில் நடந்து கொண்ட அஜித்..

0
Follow on Google News

மிக தீவிர சிவபக்தரான காமெடி நடிகர் மயில்சாமி, சிவராத்திரி அன்று மேல கோட்டையூரில் உள்ள மேகநாதீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார், அந்த நிகழ்வில் ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்ஸ் வாசிக்க அருகில் உற்சகமாக மயில் சாமி அவர் வாழ்வில் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி அது தான். சிவராத்திரி அன்றே மாரடைப்பு காரணமாக மயில்சாமி மரணம் அடைந்தது ஒட்டு மொத்த சினிமா துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

நடிகர் மயில்சாமி சினிமாவில் நடிப்பதற்கு முன்பு, ஆரம்ப கட்டத்தில் நடிகர் கமலஹாசனுக்கு டச்சப் பாயாக வேலை செய்து வந்தார், அப்போது மயில்சாமியின் மிமிக்கிரி திறமையை பார்த்த கமல்ஹாசன் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பே ஏற்படுத்தி தந்தார். அந்த வகையில் கமலஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மயில்சாமி.

அதன் பின்பு சினிமாவில் கடின போராட்டத்திற்கு பின்பு தான் ஒரு நிலைக்கு வந்தாலும் தனக்கு இந்த சினிமாவில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த கமலஹாசனை ஒரு கடவுள் போன்று பார்த்து வந்தார் மயில்சாமி. மேலும் கமலஹாசனும் மயில்சாமி உடன் நெருங்கி பழகக் கூடியவர். மயில்சாமி வீட்டில் சமைக்கும் மீன் குழம்பு மிகவும் கமலஹாசன் ருசித்து சாப்பிடக் கூடியவர்.

அந்த வகையில் அடிக்கடி மயில்சாமி வீட்டில் மீன் குழம்பு சமைத்து கமலஹாசனுக்கு கொடுத்து அனுப்பப்படும். மயில்சாமி ஒருமுறை விலை உயர்ந்த பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் அந்த காரை நேரடியாக கமலஹாசன் வீட்டிற்கு டெலிவரி செய்ய வைத்து. அந்த காரின் ஆக்சலேட்டரில் முதல் முதலில் கமலஹாசனின் பாதம் தான் பட வேண்டும் என்பதற்காக,

நடிகர் கமல்ஹாசனிடம் என்னுடைய புது காரை ஒரு தடவை நீங்கள் ஓட்டி பார்த்துவிட்டு பிறகு அந்த சாவியை எடுத்து என்னிடம் கொடுங்கள் என்று தெரிவித்து, மயில்சாமி தான் வாங்கிய புது காரில் கமலஹாசனின் பாதம் பெற்ற பின்பே, தான் வாங்கிய அந்த புது காரை பயன்படுத்த தொடங்கினார். மயில்சாமி அந்த அளவுக்கு மிக பெரிய உச்சத்தில் கமல்ஹாசனை வைத்து பார்த்து வந்தவர்.

இதேபோன்று நடிகர் அஜித் மீது மிகுந்த அன்பு மரியாதையும் வைத்துள்ள மயில்சாமி, நடிகர் கமலஹாசனை போன்று அஜித்துடனும் நெருங்கி பழகி வரக்கூடியவர். மயில்சாமி எந்த ஒரு கோவிலுக்கும் சென்றாலும் கூட அர்ச்சனை செய்யும் பொழுது நடிகர் அஜித் பெயர், நட்சத்திரம், ராசிக்கு அர்ச்சனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். பலமுறை அந்த கோவில் ஐயர்கள் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டி தானே என்று கேட்டதற்கு,

அதெல்லாம் தேவையில்லை அஜித் சார் நல்லா இருந்தா நாங்களும் நல்லா இருப்போம், அதனால் அவருடைய பேருக்கு அர்ச்சனை செய்யுங்கள் என்று சொல்லும் அளவுக்கு அஜித் மீது மிகுந்த அன்பும் பற்றும் கொண்டவர் மயில்சாமி. இந்த நிலையில் சமீபத்தில் திடீரென்று மாரடைப்பு காரணமாக மயில்சாமி மரணம் அடைந்த நிகழ்வுக்கு தமிழ் திரையுலகத்தைச் சார்ந்த முன்னணி நடிகர் நடிகைகள் நேரில் வந்து மயில்சாமிக்கு மரியாதை செலுத்தி விட்டு போன நிலையில்.

மயில்சாமி கடவுளாக பார்த்த நடிகர் கமலஹாசன் மற்றும் அஜித் இருவரும் மயில்சாமியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தவும் இல்லை, அட , ஒரு இரங்கல் செய்தி கூட தெரிவிக்காதது, சினிமா துறையினர் மத்தியில் கமலஹாசன் மற்றும் அஜித் இருவருக்கும் மீதும் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது, மேலும் அஜித்துக்கே தெரியும் மயில்சாமி தன்னை கடவுளாக பார்க்கக் கூடியவர், அப்படிப்பட்ட ஒருவர் இறந்த துக்க நிகழ்வுக்கு அஜித் போகாமல் இருந்தது கொஞ்சம் கூட இரக்கம் மனம் இல்லையா,? அஜித் இப்படி செய்யலாமா.? என்று சினிமா துறையினர் முணுமுணுத்து வருவது குறிப்பிடத்தக்கது.