அந்த நடிகையுடன் அபிஷேக் பச்சன் நெருக்கம்… ஐஸ்வர்யா விவாகரத்துக்கு கரணம் இது தான்.?

0
Follow on Google News

சமீப காலமாகவே சினிமா பிரபலங்களின் விவாகரத்துச் செய்தி இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.ஏற்கனவே தனுஷ், ஜிவி பிரகாஷ் என பல்வேறு பிரபலங்களும் திருமண வாழ்க்கையில் இருந்து விலகி தனியாக வாழப் போவதாக அறிவித்த நிலையில், தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக் பச்சனை விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் மகள் ஆராதியா தாய் ஐஸ்வர்யா ராய்யுடன் மும்பையில் வசித்து வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் விவாகரத்து முடிவுக்கு காரணம் யார் என்பது குறித்தும், அவர்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனை பற்றியும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அபிஷேக் பச்சனை 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா. இந்த தம்பதியினருக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பிறகும் எக்கச்சக்கமான பட வாய்ப்புகள் குவியவே தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு, ஹ்ருத்திக் ரோஷன் உடன் படத்தில் நடிக்கும் போது லிப் லாக் காட்சிகளில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய்.

இதனால் ஐஸ்வர்யா ராய் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதுடன் அதற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஒரு குழந்தைக்கு தாயான பிறகு முத்த காட்சிகளில் நடித்ததால் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் இடையே பல்வேறு பிரச்சனை ஏற்பட்டதாகவும், பாலிவுட் நடிகை ரேகாவிடம் ஐஸ்வர்யா ராய் கொண்டிருந்த நட்பு ஜெயா பச்சனுக்கு பிடிக்காததால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்ததாகவும் பத்திரிகையாளர் சபிதா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை ரேகா மற்றும் அமிதாப் பச்சன் காதல் விவகாரத்தால் ரேகா மற்றும் ஜெயா பச்சனிடையே நீண்ட காலங்களாக சண்டை இருந்துவரும் நிலையில் ரேகாவுடனான ஐஸ்வர்யா ராயின் நட்பும் குடும்பத்தில் அடுத்தடுத்த விரிசல்களை ஏற்படுத்தியதாக சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். அண்மையில் மிகப்பிரமாண்டமாக நடந்து முடிந்த அம்பானியின் இளைய மகன் ஆனந்த அம்பானியின் திருமண விழாவில் கூட ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனியாக கலந்து கொண்டார்.

மேலும் அப்போது திருமணத்திற்கு வந்திருந்த தனது முன்னாள் காதலர் சல்மான் கானுடன் நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் கசிந்தன.இந்த தகவலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் தனது கோபத்தையும் வெளிப்படுத்தி இருந்தால் ஐஸ்வர்யா ராய். இவ்வாறு ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் விவாகரத்து குறித்து இணையம் முழுவதும் பல்வேறு செய்திகள் வெளியாகினாலும் இருவரும் பிரிவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சபிதா குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் அவர்கள் இருவரும் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் விவாகரத்து பெருகதை குடும்பத்தினர் விரும்ப மாட்டார்கள் என்றும், எந்த பிரச்சனையானாலும் பேசி முடிவு எடுத்து இணைந்து வாழும்படி அறிவுரை செல்வார்கள் என்றும் சபித்தா தெரிவித்துள்ளார்.

மேலும் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் பிரிய முக்கிய காரணமே சொத்து பிரச்சனை தான் என்றும். அமிதபட்சனுக்கு சொந்தமான ஜூஹூ பகுதியில் இருக்கும் பெரிய வீட்டை தனது மகள் ஸ்வேதா நந்தாவிற்கு கொடுத்துவிட்டார். இதனால், ஏற்பட்ட சண்டை காரணமாக, ஒரே வீட்டில் இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார் மேலும் அபிஷேக்கிற்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதால் மேலும் பிரச்சனை பெரிதாக வெடித்ததாக பாலிவூட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.