விவகாரத்தை உறுதி செய்யும் அபிஷேக் பச்சன்… முடிவுக்கு வருகிறது ஐஸ்வர்யாராய் – அபிஷேக் பச்சன் திருமண வாழ்க்கை…

0
Follow on Google News

உலக அழகியே மனைவியாக கிடைத்தாலும், வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்பதற்கு ஏற்ப சமீப காலமாக விவாகரத்து சர்ச்சைகளில் ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் தம்பதிகள் சிக்கியுள்ளனர். பலரும் இது வெறும் வதந்திதான் என பேசி வந்த நிலையில், தற்போது அபிஷேக் பச்சன் செய்த ஒரு செயலால் விவாகரத்து செய்து உண்மைதான் என்ற தகவல் பூதாகரமாக வெடித்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய் வீட்டை விட்டே வெளியேறி விட்டதாக சில மாதங்களுக்கு முன்னதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. ஆனால் சமீபத்தில் தான் அவரது மகளின் ஆண்டு விழா நிகழ்ச்சியில், கணவர் அபிஷேக் பச்சனும், மனைவி ஐஸ்வர்யா ராயும் ஒன்றாக கலந்து கொண்டு மகளின் Performance-ஐ கண்டு ரசித்தனர். மேலும், ஆர்ச்சீஸ் எனும் நெட்பிளிக்ஸ் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சிக்கும் ஒன்றாக சென்றனர்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் பிரியவில்லை சேர்ந்துதான் இருக்கின்றனர், இவர்கள் பிரிந்து விட்டார்கள் என்பது வெறும் வதந்தி என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இடையே கருத்து மோதல்கள் கடந்த சில ஆண்டுகளாகவே வெடித்து வருவதாகவும், மகளுக்காக மட்டுமே இருவரும் ஒரே வீட்டில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து குழந்தைக்கு முன்னால் சண்டை வேண்டாம் என நினைத்து தான் தற்போது இருவரும் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், அதாவது மகளுக்கான விஷயங்களில் மட்டும் இணைந்து பங்கேற்பதாகவும், மகளின் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாக பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது நடந்த அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கும் கூட ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் மட்டுமே தனியாக வருகை தந்திருந்தார்.

அதேபோல் மறுபுறம், அபிஷேக் பச்சன், தனது தந்தை, சகோதரி என குடும்பத்துடன் வருகை தந்திருந்தார். இப்படி இவர்கள் இருவரும் தனித்தனியே வந்திருந்ததோடு, புகைப்படங்களையும் தனித்தனியாகவே எடுத்துக் கொண்டனர். அமிதாப் பச்சன் அருகில் கூட ஐஸ்வர்யா ராய் இல்லாதது ஏகப்பட்ட கிசுகிசுக்களை கிளப்பியது. இதனைப் பார்த்து பலரும் இவர்கள் பிரிந்து தான் இருக்கிறார்கள் போல என்றும், விவாகரத்து செய்யப்போகும் செய்தி உறுதி தான் போல என்றும் யூகித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த யூகத்தை உண்மையாகும் வகையில், தற்போது அபிஷேக் பச்சன் டைவர்ஸ் குறித்த ஒரு போஸ்ட்க்கு லைக் போட்டுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர், 50 வயதை கடந்த தம்பதியினர், விவாகரத்து செய்து பிரிவது ‘க்ரே டைவர்ஸ்’ என அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் தற்போது இது டிரெண்டாகி வருகிறது.

குழந்தைகளுக்காக சகித்துக் கொண்டு வாழும் தம்பதியினர், நரைத்த பின்னர், தங்களுக்கான வேறு துணையை தேடிக் கொள்வதும், புதிய வாழ்க்கைக்காக விரும்பி ஆசைப்பட்டே இதை செய்கின்றனர். லேட்டஸ்ட்டாக அபிஷேக் பச்சன் ‘Grey Divorce’ தொடர்பான இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றுக்கு லைக் போட்ட நிலையில், இவர்கள் விவாகரத்து செய்யப்போவது உறுதி என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்த போஸ்ட்டில், விவாகரத்து யாருக்கும் எளிதானது இல்லை. கடைசி வரை ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்கிற கனவு யாருக்குத் தான் இருக்காது. இல்லை என்றால் சாலையை கடக்கும்போது கையை பிடித்துக் கொண்டு செல்லும் மூத்த ஜோடிகளின் வீடியோக்களை பார்க்கும்போது அதே போன்று செய்ய வேண்டும் என யாருக்கு தான் ஆசை இருக்காது.

ஆனால் சில சமயங்களில் நாம் ஆசைப்படுவது போன்று வாழ்க்கையில் நடப்பது இல்லை. பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்துவிட்டு பிரியும்போது அதை மக்கள் எப்படி ஏற்கிறார்ளோ என கூறப்பட்டிருந்தது. இதனை அபிஷேக் பச்சன் லைக் செய்தது தான், ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சனின் விவாகரத்தை உறுதி செய்துள்ளது.