என்னாது ரஜினிக்கு வயசாச்சு.. அதனால.. கலாய்த்த மன்சூர் அலிகான்…

0
Follow on Google News

கடந்த சில மாதங்களாக சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து தான் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ரஜினி தான் நிரந்தர சூப்பர்ஸ்டார் என்று ரஜினி ரசிகர்களும், விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என விஜய் ரசிகர்களும் மாறி மாறி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்பற்றி ஒரு சில திரைபிரபலங்களும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் இவர்களின் மோதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி அமையவில்லை.

தொடர்ந்து ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களின் மோதல்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்த மோதல்கள் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க மறுபக்கம் ஜெயிலர் படத்தில் இருந்து ஹுக்கும் என்ற பாடல் வெளியானது. இப்பாடலில் இடம்பெற்ற பட்டத்தை பறிக்க நூறு பெரு என்ற வரி விஜய் ரசிகர்களை வெகுவாக சீண்டியது. இது மேலும் இவர்களின் மோதலை அதிகரித்தது.

பலரும் இந்த பாடலின் மூலம் ரஜினி தான் நிரந்தர சூப்பர்ஸ்டார் என சொல்வதாக தங்களின் கருத்துக்களை கூறி வந்தனர். இதுபோக ரஜினி ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கூறிய காக்கா கழுகு கதையை ஒரு சிலர் ட்விஸ்ட் செய்தனர். சிலர் காக்கா என ரஜினி விஜய்யை தான் குறிப்பிடுகின்றாரோ என கிளப்பி விட அது மேலும் இவர்களின் மோதலை அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது எந்த ஒரு திரைபிரபலங்கள் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தாலும் அவர்களிடம் சூப்பர்ஸ்டார் பற்றிய கேள்வி கேட்கப்பட்டு வருகின்றது. அதுபோல தான் தற்போது நடிகர் மன்சூர் அலி கானிடமும் சூப்பர்ஸ்டார் பற்றி கேள்விகேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக திலீப்குமார் இருந்தார். பிறகு ராஜேஷ் கண்ணா வந்தார். தமிழில் தியாகராஜ பாகவதர் இருந்தார். பின் எம்ஜிஆர் வந்தார். அதற்கு பிறகு ரஜினிகாந்த் வந்தார்.

ஒருவரின் மூன்று படங்கள் வரிசையாக ஓடி வசூலித்துவிட்டால் அவர்தான் உச்ச நட்சத்திரம் என்று கருதப்படுகிறது. வயதானால் பட்டத்தை விட்டுக்கொடுத்துவிட வேண்டும். ரஜினிகாந்த் ஒரிஜினலாகவும் சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும். படத்தில் மட்டும் இருந்தால் எப்படி. நிஜத்திலும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அது எம்.ஜி.ஆர் மட்டும்தான்” என்று பதிலளித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் செம்ம காண்டாகி உள்ளனர்.

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார்.

தற்போது இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக விஜயுடன் லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய்- மன்சூர் அலி கான் இருவரும் இணைந்து நிறைய படங்களில் நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே. நாளைய தீர்ப்பு, தேவா, செந்தூரப்பாண்டி, மின்சார கண்ணா போன்ற பல படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இருவரும் குடும்ப நண்பர்களாகவும் இருக்கிறார்கள். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ படத்தில் மன்சூர் அலிகான்- விஜய் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஏற்கனவே விஜய் உடன் வாரிசு படத்தில் நடித்த நடிகர் சரத்குமார் வாரிசு ஆடியோ வெளியிட்டு விழாவில் விஜயை சூப்பர் ஸ்டார் என்று அழைத்து சூப்பர் ஸ்டார் பிரச்சனை மிக பெரிய அளவில் விவாத பொருளாக்கினார், தற்பொழுது லியோ படத்தில் விஜய் உடன் மன்சூர் அலிகான் நடித்துள்ள நிலையில் தற்பொழுது அவரும் ரஜினியை சீண்டும் வகையில் சூப்பர் ஸ்டார் குறித்து சர்ச்சை கூறிய வகையில் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.