30 கோடியா… சூர்யாவை கழட்டிவிட்டு எஸ்கேப் ஆன வெற்றிமாறன்.. பணத்தாசையில் வெற்றிமாறன் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலுமஹேந்திர உதவி இயக்குனராக இருந்து வந்தவர் வெற்றிமாறன், அது ஒரு கனாக்காலம் படத்தில் இயக்குனர் பாலு மஹிந்திரா உதவி இணயக்குநராக பணியாற்றிய வெற்றிமாறன், அந்த படத்தில் நடித்த தனுஷ் உடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன், முதல் படம் நல்ல ஹிட் அடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை வெற்றிமாறன் இரண்டாவது படம் ஆடுகளம் அவரை தேசிய விருதை வாங்கும் அளவுக்கு உச்சம் அடைய செய்தது. இதனை தொடர்ந்து விசாரணை , வடசென்னை , அசூரன் என சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி சுமார் 15 வருடத்தில் இதுவரை 5 படங்கள் மட்டுமே எடுத்துள்ளார் வெற்றிமாறன், ஆனால் இவருடைய படங்கள் அனைத்தும் எதோ ஒரு விதத்தில் பாராட்டும் விதத்தில் இருந்தாலும், அதே நேரத்தில் வடசென்னை போன்ற படங்கள் சமூக நலனுக்கு எதிரானது என்கிற விமர்சனமும் உண்டு.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 5 படங்களில் 4 படங்கள் தனுஷ் நடித்த படம், இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த இரண்டு வருடத்துக்கு மேல் படப்பிடிப்பு நடந்து வரும் படம் விடுதலை, அதே போன்று ஒரு வருடத்துக்கு முன்பு அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியான படம் நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம்.

ஆனால் வெற்றிமாறனிடன் சிக்கி கொண்டு கடந்த இரண்டு வருடமாக படாத பாடு பட்டு வரும் நடிகர் சூரி, விடுதலை படத்தின் காரணமாக பல பட வாய்ப்புகளை இழந்து மிக பெரிய வருத்தத்தில் உள்ளார் சூரி. இருந்தும் விடுதலை படத்தின் படப்பிடிப்பை இழுத்து கொண்டே செல்கிறார் வெற்றிமாறன், அதே போன்று நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் ரிகர்சல் படப்பிடிப்பு, மேலும் வாடிவாசல் படத்திற்காக பிரமாண்டமான ஜல்லிக்கட்டு களம் அமைத்து படத்தை ஆரம்பித்த வெற்றிமாறன்.

இதன் பின்பு படத்தின் படப்பிடிப்பை தொடங்கவில்லை, இப்படி ஒரு பக்கம் விடுதலை படத்தை முடிக்காமலும், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை தொடங்காமலும், இவரை நம்பி வந்த நடிகர்களை, எதற்கு இவர் படத்தில் நடிக்க வந்தோம் என புலம்பும் நிலையை ஏற்படுத்தியுள்ள வெற்றிமாறனுக்கு தெலுங்கு சினிமாவில் இருந்து நடிகர் ஜூனியர் NTRரிடம் இருந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக சுமார் 30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 30 கோடியா.. என்றதும் வாடிவாசல் படத்தை மெதுவாக எடுக்கலாம், தெலுங்கில் ஒரு படம் எடுத்துவிட்டு வந்து விடுவோம், விடுதலை படத்தை தொடருவோமோ, இல்லை தெலுங்கில் ஒரு படத்தை முடித்துவிட்டு வந்து தொடர்வோமா என 30 கோடி சம்பளத்தை கேட்டு பெரும் குழப்பத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் வாடிவாசல் படத்திற்க்காக காத்திருந்த நடிகர் சூர்யாவை கழட்டிவிட்டு எஸ்கேப் ஆகும் முடிவில் இருந்துள்ளார் வெற்றிமாறன்.

இந்த தகவல் அறிந்த நடிகர் சூர்யா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார் சூர்யா, அதாவது, அடுத்த இரண்டு வருடத்துக்கு என்னிடம் கால்சீட் இல்லை, அதனால், பாலா படம், சிறுத்தை சிவா படம், அதனை தொடர்ந்து ஞானவேல் ராஜா இயக்கத்தில் ஒரு படம் என அனைத்தும் முடித்ததும் வாடிவாசல் படப்பிடிப்பை தொடங்களாம் என வெற்றிமாறனிடம் இன்னும் இரண்டு வருடத்துக்கு என் பக்கமே வராதே என்று சூர்யா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அச்சரியமூட்டு நயன்தாரா வீட்டு பாத்ரூம்… என்னனென்ன சிறப்பு அம்சங்கள் தெரியுமா.?வாயை பிளக்கும் பிரபலங்கள்..