ரூம் போட்டு காப்பியடித்து மாட்டிய அட்லீ… செம்ம டென்ஷனில் ஷாருக்கான் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் அஜித் – விஜய் இருவருக்கும் இடையில் இருக்கும் போட்டி போன்று, இந்தி சினிமாவில் ஷாருக்கான் – சல்மான் கான் இருவருக்கும் கடும் போட்டி உண்டு. இங்கே தமிழ் சினிமாவில் தொழில் ரிதியாக அஜித் – விஜய் இருவருக்கும் போட்டி இருக்கும், அதேபோல் அவரது ரசிகர்களுக்குள் போட்டி இருக்கும் ஆனால் அஜித் – விஜய் இருவருக்கும் இடையில் எந்த ஒரு நேரடி மோதல் இருக்காது. ஆனால் ஷாருகான் – சல்மான் கான் இருவரும் நேரில் மோதிக்கொண்ட சம்பவமும் இந்தி திரையுலகில் அரங்கேறியிருக்கிறார்.

இந்நிலையில் ஷாருக்கான் – சல்மான் கான் இருவரும் சினிமாவில் தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான படம் மிக பெரிய வெற்றியை கொடுத்து தனது மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டார், ஆனால் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெற்றி பெற்ற படம், 2013ம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ். இதன் பின்பு சுமார் 9 ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களை மட்டும் கொடுத்து வருகிறார் ஷாருக்கான்.

இந்நிலையில் தற்பொழுது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடிக்கும் ஷாருகான், இந்த படத்தில் வெற்றியை கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார்.ஆனால் எப்போது அட்லீ உடன் ஷாருக்கான் இணைந்த பின்பு பிரச்சனை மேல் பிரச்சனையை சந்தித்து வருகிறார். ஜவான் படம் தொடங்கிய சில நாட்களில் ஷாருகான் மகன் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி சிறைக்கு செல்ல பாதியிலே நின்றது படப்பிடிப்பு.

ஜவான் படத்தின் கதை டிஸ்கேஷன் செய்வதற்கு மட்டும்,சுமார் 4 கோடி வரை இயக்குனர் அட்லீக்கு செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பு தரப்பில் இருந்தும் அட்லீ மீது செம்ம கடுப்பில் இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் காப்பி அடித்து கேலி கிண்டலுக்கு உள்ளான அட்லீ, இந்தி சினிமாவுக்கு சென்றும் அதே பார்முலாவை பின்பற்றியுள்ளது தெரியவந்துள்ளது. ஜவான் படத்தின் பார்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

மேலும் படம் இது வரை எடுக்கப்பட்ட காட்சிகள் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் வெளியான விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் படத்தில் இருந்து காப்பி யடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டை காட்சிகள் சில ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி யடிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தகவல் அறிந்த தயாரிப்பு நிறுவனம் காப்பியடித்து படம் எடுக்க எதற்கு கதை டிஸ்கஷன் என்று 4 கோடி வரை செலவு செய்ய வேண்டும் என நடிகர் ஷாரூக்கானிடன் கேட்க.

மேலும் இதுவரை எடுக்கப்பட்ட வரை திருப்தியில்லை என ஷாருக்கான் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதநாயகி நயன்தாரா திருமணம் செய்ய இருப்பதால் மீண்டும் அவரை வைத்து படம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படி அட்லீ இயக்கும் ஹிந்தி படத்தில் பல குழப்பம் நீடித்து வருகையில், ஷாருக்கான் நடிக்கும் இந்த படத்துடன் அவருடைய சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார் போல தமிழ்நாட்டில் இருந்து வந்த அட்லீ என இந்தி சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

திருமணத்தை வியாபாரம் செய்த நயன்தார – விக்னேஷ் சிவன்.. அட..கடவுளே.. என்ன செய்துள்ளார்கள் தெரியுமா.?