மீண்டும் பிரச்சனை… ஐஸ்வர்யாவை எச்சரித்த தனுஷ்…தந்தை ரஜினியிடம் கதறி அழுத ஐஸ்வர்யா..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் அவருடைய கணவர் நடிகர் தனுஷை விட்டு பிரிவதாக அறிவித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு, சட்டப்படி விவாகரத்து செய்வதற்கான எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை, இதனால் இருவரும் மீண்டும் இணைவதற்கு வாய்ப்புகள் இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், இருவருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் மீண்டும் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் கணவர் தனுஷை விட்டு பிரிந்த ஐஸ்வர்யா, சினிமாவில் தன்னுடைய முழு கவனத்தை செலுத்த தொடங்கினார், அந்த வகையில் ஏற்கனவே 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்து புதிய படத்திற்கான கதையை தயார் செய்யும் வேலைகளில் இறங்கினார்.

ஐஸ்வர்யா இயக்கிய 3 மற்றும் வை ராஜா வை ஆகிய இரண்டு படங்களும் படு தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து அடுத்து அவருடைய இயக்கத்தில் எந்த ஒரு தயாரிப்பாளரும் படத்தை தயாரிக்க முன் வரவில்லை, மேலும் இரண்டாம் கட்ட அல்லது மூன்றாம் கட்ட நிலையில் உள்ள ஹீரோ கூட ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்தால், தங்கள் சினிமா எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி விடும் என ஐஸ்வர்யா கதை சொல்ல நேரம் கேட்டால் கூட, நேரம் கொடுக்காமல் தெறித்து ஓடினார்கள்.

இந்நிலையில் மீண்டும் கணவர் தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கலாம் என கதையை தயார் செய்தார். ஆனால் தனுஷ் ஏற்கனவே 3 படத்தினால் ஏற்பட்ட தோல்வியும் நஷ்டமும் போதும் என மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் மீண்டும் நடிப்பதை புறக்கணித்துவிட்டார். தந்தை ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட ஐஸ்வர்யாவிடம், உனக்கு அனுபவம் பத்தாது என நேரடியாகவே ரஜினிகாந்த் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய இயக்குனர் கனவை கைவிட்ட ஐஸ்வர்யா, பரதநாட்டியம், யோக, என ரூட்டை மாற்றினார். இருந்தும் அங்கேயும் அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இந்நிலையில் கணவர் தனுஷை பிரிந்த பின்பு நீண்ட இடைவேளைக்கு பின்பு மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள ஐஸ்வர்யா கதையை தாயார் செய்து, சூரரை போற்று படத்தின் பெண் இயக்குனர் சுதா கொங்காரா போன்று இயக்குனராக சாதிக்க வேண்டும் என களம் இறங்கினார் ஐஸ்வர்யா.

ஆனால் பிரபல நடிகர்கள் இவருடைய படத்தில் நடிப்பதற்கும் மற்றும் படத்தை தயாரிக்க எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் முன் வரவில்லை. இந்நிலையில் குடும்ப நண்பரான ராகவா லவரன்ஸை ஒரு வழியாக தன்னுடைய இயக்கத்தில் நடிக்க கால்சீட் வாங்கினார் ஐஸ்வர்யா, ஆனால் ராகவா லவரன்ஸ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் புதிய படத்தில் இணைந்துள்ளதாக வெளியான அறிவிப்புக்கு பின்பு, இவர்கள் கூட்டணியின் புதிய படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.

இதற்கு காரணம், இவர்கள் படத்தை யாரும் தயாரிக்க முன்வரவில்லை என்றும், அதனால் இந்த படம் கைவிடப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கணவர் தனுஷ் உடன் இணைந்துள்ள ஐஸ்வர்யா, தன்னுடைய புதிய படத்திற்கு கணவர் தனுஷிடம் கால்சீட் கேட்டுள்ளார் ஐஸ்வர்யா, ஆனால் நமக்குள் பிரச்சனை வேண்டாம் என்றால், இந்த முயற்சியை கைவிட்டு விடு என மனைவி ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் தனுஷ்.

இந்நிலையில், நேரடியாக தந்தை ரஜினிகாந்தை அணுகிய ஐஸ்வர்யா, ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கியுள்ளேன், அந்த படம் சரிவர போகவில்லை என்றாலும் கூட, தற்பொழுது தோல்வியில் இருந்து நிறைய படங்களை கற்று கொண்டுள்ளேன். நீங்களே என் மீது நம்பிக்கை வைத்து கால் சீட் தரவில்லை என்றால் வேறு யார் தருவார்கள் என ஐஸ்வர்யா தன்னுடைய தந்தை ரஜினிகாந்த் மனம் உருகும்படி கண்ணீர் மல்க கேட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் மனம் உருகிய ரஜினிகாந்த், தன்னுடைய மகள் இயக்கத்தில் நடிக்க பச்சை கொடி காட்டியுள்ளார். இதனை தொடர்ந்து லைக்கா நிறுவனத்திடம் பேசியதை தொடர்ந்து, தன்னுடைய தந்தை ரஜினிகாந்த் நடிக்க, ஐஸ்வர்யா இயக்கம் புதிய படத்தை தயாரிப்பதர்க்கு லைக்கா நிறுவனம் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.