பீஸ்ட் பட பாதியிலே வெளியேறிய ரஜினிகாந்த்..பீதியில் நெல்சன்.. செம்ம கடுப்பில் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்தே. இந்த படத்தை சன் பிக்சர் தயாரித்து இருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் வகையில் அண்ணாத்தே படம் அமைந்திருந்தாலும். இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய ரஜினிகாந்த் சம்பளத்தை குறைத்து அடுத்த ஒரு படத்துக்கு கால் சீட் கேட்டது சன் பிக்சர், இதற்கு ரஜினிகாந்த் ஒப்பு கொண்டார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் புதிய படத்துக்கான இயக்குனர்கள் யார் என்கிற போட்டியில் பல முன்னனி இயக்குனர்கள் வரிசையில் நிற்க்க, ஒவ்வொரு இயக்குனரிடமும் கதை கேட்டு வந்த ரஜினிகாந்த். இறுதியில் இயக்குனர் நெல்சன் கதையை ஓகே சொன்னார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த புதியப்படத்துக்கான வேலையை சன் பிக்சர் தயாரிப்பில் விஜய் நடித்த பிஸ்ட் படம் வெளியான பின்பு தொடங்குவதற்கு தயாராக இருந்தது சன்பிக்ச்சர்.

பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் கதை விவகாரங்களில் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் தலையிடாது என கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் கதை முழுக்கு முழுக்க விஜய் விருப்பத்துக்கு ஏற்ப தயாரானது என்றும் இந்த படத்தில் தயாரிப்பு நிறுவனம் ஏதும் தலையிடவில்லை என்று கூறப்படுகிறது. அதே போன்று ரஜினி படத்திலும் தயாரிப்பு நிறுவனம் ரஜினி விருப்பத்துக்கே விட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பீஸ்ட் படம் வெளியாகி படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். ஆகையால்ல் ரஜினிகாந்த் பீஸ்ட் படம் பார்ப்பதற்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் சிறப்பு கட்சியை பார்க்க வந்த ரஜினிகாந்த் படம் தொடங்கிய சில மணி நேரங்களில் கடும் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.

முதல் பாதியில் முடிந்து இரண்டாம் பாதியில் செம்ம கடுப்பில் படம் முடிவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே திரையரங்கில் இருந்து வெளியான ரஜினிகாந்த், அங்கே இருந்த இயக்குனர் நெல்சனிடம் படம் எப்படி இருக்கும் என்று ஏதும் பேசாமல், சிரித்து கொண்டே வெளியேறி சென்று விட்டதாக கூறப்படுகிறது. படம் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் ரஜினிகாந்த் படம் முடிவதற்கு முன்பே வெளியேறி சென்றது இயக்குனர் நெல்சனுக்கு கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் ஓகே சொன்னதால் தான் சன் பிக்சர் நெல்சன் திலிப்குமாரை ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு ஓகே செய்தது. ஆனால் தங்கள் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அதிருப்தியில் இருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இந்நிலையில் தற்பொழுது பீஸ்ட் படம் பார்த்த பின்பு ரஜினிகாந்த் என்ன சொல்கிறார் என அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறது சன் பிக்சர் என்றும், ரஜினியின் புதிய படத்தின் இயக்குனர் மாற்றுவதற்கான வாய்ப்புகள் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பீஸ்ட் படு மொக்கை… கதறும் விஜய் ரசிகர்கள்..! நெல்சன் இப்படியா விஜய் அண்ணாவ வெச்சு செய்வார்.!