பாலா மனைவி முத்துமலர் இரண்டாவது திருமணம்… அதிரடி ஏற்பாடு … மாப்பிள்ளை யார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா அவரது மனைவி முத்துமலர் இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இவர்கள் விவாகரத்து வழக்கு ரகசியமாக பதியப்பட்டு, விசாரணையும் ரகசியமாக நடைபெற்று வந்தது. இதனால் இவர்களின் விவாகரத்து தீர்ப்பு வெளியானது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து பலருக்கு குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் பாலா மனைவி முத்துமலர் தான் என தகவல் வெளியானது. போதை பழக்கத்துக்கு உள்ளான இயக்குனர் பாலா, ஒரு கட்டத்தில் குடும்பத்தை கண்டு கொள்ளாமல் மது அருந்திவிட்டு அவருடைய அலுவலகத்திலோ படுத்து விடுவார் என்றும், மேலும் பாலாவுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கமும் உண்டு என கூறப்படுகிறது. பல முறை நள்ளிரவில் காரில் சென்று அலுவலகத்தில் மட்டையான பாலாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் முத்துமலர்.

இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் பாலா மீது வெறுப்படைந்த மனைவி முத்துமலர், தன்னுடைய கல்லூரி கால ஆண் நண்பரான பிரபல அரசியல் தலைவரின் மகனுடன் நீண்ட காலத்துக்கு பின்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டுள்ளார். இவர்களின் பழக்கம் கள்ள காதலாக உருவெடுத்து அந்த அரசியல் தலைவரின் மகனுடன் அடிக்கடி டெல்லி செல்வது, வெளிநாடு செல்வது என செம்ம லூட்டி அடித்து வந்துள்ளார் முத்துமலர்.

இந்த விவகாரம் பாலா கவனத்துக்கு வந்ததை தொடர்ந்து கணவன் – மனைவி இடையே பெரும் பிரட்சனை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர்களின் பிரச்சனை குடும்ப தலைவர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. முத்துமலர் இனி ஒரு நிமிடம் கூட பாலாவுடன் இணைந்து வாழ மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து இருவரும் விவாகரத்து பெறுவதர்க்கு நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்தே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதன் பின்பு சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்த பாலா – முத்துமலர் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை தாய் முத்துமலர் உடன் இருக்கிறது, அவ்வப்போது மகளை நேரில் அழைத்து பார்த்து வருகிறார் பாலா. இந்நிலையில் முத்துமலர் ஏற்கனவே தொடர்பில் இருந்த அரசியல் தலைவரின் மகன் குடும்பத்தில் முத்துமலர் விவகாரம் தெரியவர, அதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முத்துமலர் தொடர்பை அந்த அரசியல் தலைவர் மகன் துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையான முத்துமலர் வாழ்க்கையில் புதிய திருப்பமாக, அவரது வீட்டில் இரண்டாவது திருமணம் செய்து வைக்க மாப்பிளை பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு குழந்தையுடன் வாழ்க்கை துணையில்லாமல் தனியாக எத்தனை நாளைக்கு தான் வாழ முடியும் என்பதால், முத்துமலருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

திரிஷா, ஹன்சிகா, தமன்னா ஆபாச வீடியோக்கள்… முக்கிய பிரபலம் வெளியிட்ட பரபரப்பு..! யாருடன் தெரியுமா.?