பாலா – சூர்யா படத்தின் ஒளிப்பதிவாளர் பாதியில் ஓட்டம்… போதும்டா சாமி ஆள விடுங்க.. ஏன் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து பாதியிலே நிற்கும் படம் வணங்கான், இந்த படத்தை 2டி தயாரிப்பில் சூர்யா – ஜோதிகா இருவரும் தயாரிக்கின்றனர். கடைசியாக பாலா இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது, மேலும் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந்து குடும்பத்திலும் பிரச்சனையில் இருந்த பாலாவுக்கு உதவும் நோக்கில் அவருடைய இயக்கத்தில் நடிக்க முன் வந்தார் சூர்யா.

படத்தின் கதை மீனவர்கள் தொடர்பானது என்பதால், கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த படம் தொடங்கியது முதல் பாலா – சூர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, ஒரு கட்டத்தில் உச்சக்கட்டம் அடைந்ததை தொடர்ந்து. முதல் கட்ட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருக்கிய நிலையில், படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாதியிலே வெளியேறி சென்னை திரும்பினார் சூர்யா.

இதன் பின்பு சூர்யா – பாலா இருவருக்கு ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இருந்தும் பாலா பிடிவாதம் பிடிக்க, படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில் ஒரு கட்டத்தில் இறங்கி வந்தார் சூர்யா. இதனை தொடர்ந்து சூர்யா – பாலா இருவருக்கும் இடையில் சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் எடுக்க ஏற்பாடு நடைபெற்று வந்த நிலையில், திடீரென இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கோவாவுக்கு பதில் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது. இருந்தும் படப்பிடிப்பு தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது, இதனால் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன், அவருக்கு தேடி வந்த அதிகப்படியான படவாய்ப்புகளை மிஸ் செய்தார்.

இருந்தும் வணங்கான் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகலாம் என காத்திருந்த பாலசுப்ரமணியன், இவர்கள் மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவது போன்று தெரியவில்லை என கடுப்பாகி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவுடன், சாரி சார், நிறைய பட வாய்ப்புகளை மிஸ் பன்றேன், அதனால் இந்த படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் என தெரிவித்துவிட்டு வணங்கான் படத்தில் இருந்து விலகியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன்.

இதனை தொடர்ந்து வணங்கான் படத்தில் ஓம்பிரகாஷ் என்கிற ஒளிப்பதிவாளரை அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு ஒப்பந்தம் செய்துள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா என கூறப்படுகிறது. இருந்தும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது தொடர்ந்து இழுபறியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஓசில கூட வேண்டாம்.. நயன்தாரவை அசிங்கப்படுத்திய நிறுவனம்.. கோபத்தில் நயன்தாரா என்ன செய்தார்