நா தழுதழுக்க கண்கலங்கிய அனிரூத்…. எதற்காக உணர்ச்சிவசப்பட்டார் அனிரூத் தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : தமிழ்த்திரையுலகில் இளசுகளை சுண்டியிழுக்கும் வகையில் இசையமைத்து வருபவர் அனிருத். இவர் இளம் ஹீரோக்களின் ஆஸ்தான இசுயமைப்பாளரும் கூட. இவரது கேரியரில் உலகையே திரும்பிப்பார்க்கவைத்த படம் தனுஷ்- ஸ்ருதி ஹாசன் நடித்த 3 திரைப்படம். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை முன்னாள் முதல்வர் மன்மோகன் சிங் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமலஹாசனுடன் முதல்முறையாக அனிருத் இணைந்திருக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இந்த திரைப்பத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக இசைவெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகர் கமல் இயக்குனர் லோகேஷ் மற்றும் அனிருத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பது இயக்குனர் லோகேஷ் கனகராஜால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மூன்று பெரிய ஜாம்பவான்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான இசைவெளியீட்டு ப்ரோமோஷன் ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் பேசிய அனிருத் மிக உணர்ச்சிகரமாக பேசினார்.

அவர் பேசுகையில் ” விக்ரம் எங்களுக்கு மிக ஸ்பெஷலான படம். இப்படத்தின் இறுதிப்பணியை சிறப்பாக முடித்துவிட்டோம். பொதுவாக நான் உணர்ச்சிவசப்படுபவன் கிடையாது. ஆனால் விக்ரம் படத்தில் பணியாற்றியதை இனி மிஸ் செய்யப்போகிறேன். இன்று படத்தை பார்த்து கண்கலங்கிவிட்டேன். லோகேஷிடம் உணர்ச்சிவசப்பட்டேன். படத்தில் கமல் நடிப்பு என்னை பிரமிக்க வைத்துவிட்டது” என நா தழுதழுக்க அனிருத் பேசியுள்ளார்.

அம்மா ப்ளீஸ் வேண்டாம்…. கையை பிடித்து கதறிய இரண்டு மகன்கள்… தாய் ஐஸ்வர்யா என்ன செய்தார் தெரியுமா.?