நயன்தாரா திருமணம் பற்றிய ஆவணப்படம்… கெளதம் மேனன் இயக்கம்… காசு ..பணம் …துட்டு.. மணி .. மணி..

0
Follow on Google News

சென்னை : ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர் நயன்தாரா. நடிகர் சிம்புவுடன் நடித்த வல்லவன் திரைப்படத்தின் மூலம் தமிழக இளசுகளின் நெஞ்சில் நிரந்தரமாக குடிகொண்ட நயன்தாரா சிம்புவுடன் காதல் வலையில் விழுந்தார். இருவரின் அந்தரங்கபுகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து அவரிடம் இருந்து பிரிந்தார்.

பின்னர் நடன இயக்குனரான பிரபுதேவாவுடன் சில வருடங்கள் சுற்றித்திரிந்தார். இந்த காலகட்டத்தில் தமிழ்த்திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக அவதாரம் எடுத்தார். அவர் நடித்த அத்தனை படங்களும் ஹிட் அடிக்க ஆரம்பித்தது. பிரபுதேவாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பிற்கு பிறகு அவரை பிரிந்த நயன்தாரா படங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தினார்.

இந்நிலையில் தான் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும்போது அதன் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவிற்கு மூன்றாவது முறையாக காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து அந்த ஜோடிகள் உலகையே வலம்வந்தது.அவரது திரைப்படங்களில் நயன்தாராவும் நடிக்க தொடங்கினார்.

இந்நிலையில் நயன்தாராவின் திருமணம் உறுதியாகியுள்ள நிலையில் வருகிற ஜூன் 9 அன்று விக்னேஷ் மற்றும் நயன்தாராவிற்கு திருமணம் நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாபலிபுரத்தில் உள்ள மஹாப்ஸ் பைவ்ஸ்டார் ஹோட்டலில் மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற உள்ளது.

அதிகாலை 5.30 முதல் 7 மணிவரை நடைபெற இருக்கும் இந்த வைபவத்தில் ரஜினிகாந்த் உட்பட 30 பேருக்கு மட்டும் அழைப்பு விடுதிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் நயனின் திருமணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆவணப்படமாக எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.