நயன்தாரா திருமணத்தில் அவமானப்படுத்தப்பட்ட சினிமா பிரபலங்கள்.. யார் அந்த பிரபலங்கள் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது.கடந்த ஏழு வருடமாக காதலித்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் எப்போது என்கிற கேள்வி நீடித்து வந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில். ஏழு வருடமாக காதலித்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் ஜோடி கணவன் மனைவியாக மாறியுள்ளனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தின் நயன்தாரா நடித்தார், இந்த படம் வெளியான உடனே இருவரும் திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தவர்கள், இவர்களின் திருமணத்தை முதலில் திருப்பதியில் நடத்த திட்டமிட்டனர். அதற்கான முன் ஏற்பாடுகளுக்காக திருப்பதி சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் நடை பெரும் இடங்களை பார்வையிட்டு வந்தனர்.

இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை வீடியோவாக எடுத்து அதை OTT யில் வெளியிட நெட் பிலிக்ஸ் வெளியிட சுமார் ரூபாய் 25 கோடிக்கு விலை பேச, உடனே சற்றும் யோசிக்காமல் சம்மதம் தெரிவித்தனர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி. இதனை தொடர்ந்து பிரமாண்டமாக செட் அமைத்து சினிமா போன்று படப்பிடிப்பு நடத்துவது என்பது திருப்பதியில் முடியாது என்பதால் நெட் பிலிக்ஸ் மகாபலிபுரத்தில் திருமண ஏற்பாடுகளை நடத்த திட்டமிட்டது.

இதனை தொடர்ந்து மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக செட் அமைத்து சினிமா காட்சியில் நடைபெறும் படப்பிடிப்பு போன்று திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர் நெட் பிலிக்ஸ். இந்த திருமணத்திற்கு கைபேசி அனுமதி மறுக்கப்பட்டு. திருமண நுழைவு வாயிலில், திருமண நிகழ்வுக்கு வந்தவர்கள் கைபேசி வாங்கி வைக்கப்பட்டது. மேலும் அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த பௌண்சர் என்று அழைக்கப்படும் பாதுகாவர்கள் யாரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கிடையாது.

அவர்கள் அனைவரும் மும்பையில் இருந்து வந்தவர்கள் என்றும், அவர்களுக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலம் குறித்து தெரியாததால், அனைவரையும் ஒரே மாதிரியாக தான் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து திருமணத்துக்கு வந்த சினிமா இயக்குனர் ஒருவரை கைபேசியை கொடுங்க, இப்படி போங்க அப்படி போங்க என அங்கிருந்த பாதுகாவலர்கள் அலைக்கடிக்க, டென்ஷனான அந்த இயக்குனர் என்னுடைய கைபேசியை தாருங்கள் நான் இந்த திருமணத்தில் பங்கு பெறவில்லை என டென்ஷனாக.

உடனே அங்கிருந்தவர் பாதுகாவலரிடம் அந்த இயக்குனர் குறித்து தெரிவிக்க உடனே மரியாதையுடன் உள்ளே அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதே போன்று பெரும்பாலான நடிகர், நடிகைகளிடம் திருமணம் நடைபெறும் மண்டபத்தின் நுழைவாயில் இருந்தவர்கள் கடும் கட்டுப்பாடு விதிக்க பலர் டென்ஷனில் அங்கிருத்தவர்களிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. திருமணம் நடைபெறும் நிகழ்வு விடியோவாக வெளியிடாமல் தடுக்குவதர்க்காக தான் கைபேசி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

என்னை நம்ப வைத்து ஏமாற்றிய அனிரூத்… கதறி ஆளும் கீர்த்தி சுரேஷ்..! என்ன நடந்தது தெரியுமா.?