நடிகை முன் சூர்யாவை அசிங்க படுத்திய பாலா… அவமானம் தாங்க முடியாமல் சூர்யா என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து சூர்யா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், ஆரம்பகட்டத்தில் அவருக்கு சினிமாவில் வரவேற்பு இல்லை. சூர்யா நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அவருடைய தந்தை நடிகர் சிவக்குமார் சிபாரிசில் தொடர்ந்து ஹீரோவாக படத்தில் நடித்து வந்தார். சுமார் ஏழு படங்கள் வரை ஹீரோவாக நடித்திருந்த நடிகர் சூர்யாவுக்கு அவர் நடித்த 8வது படம் நந்தா தான் சூர்யா என்கிற ஒரு நடிகனை அடையாளப்படுத்தியது.

இயக்குனர் பாலா முதல் படத்தில் நடிகர் விக்ரம் என்கிற ஒரு நடிகரை உலகிற்கு அடையாளம் காட்டியது போன்று அடுத்த இரண்டாவது படத்தில் சூர்யா என்கிற நடிகரை அடையாளம் காட்டினார். நந்தா படம் வெளியாகும் வரை பட வாய்ப்புகள் தேடி அழைந்த நடிகர் சூர்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது, இதனை தொடர்ந்து மீண்டும் பாலா உடன் இணைத்து சூர்யா நடித்த பிதாமகன் படம் மேலும் அவரை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது.

இதன் பின்பு முன்னணி நடிகர் வரிசையில் இடம் பெற்ற சூர்யா அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தார். எந்த நிலை சென்றாலும் வந்த வழி மறவாதே என்கிற வாசகம் போன்று, தன்னை சினிமாவுக்கு அடையாளம் காட்டிய இயக்குனர் பாலா மீது எப்போது மதிப்பும் மரியாதையும் கொண்டவர் நடிகர் சூர்யா. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக பெரும் குழப்பத்தில் இருந்து வந்த இயக்குனர் பாலா கடந்த சில வருடங்களாக சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்த முடியமால் இருந்து வந்தார்.

சமீபத்தில் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந்த பின்பு, தனது முழு கவனத்தையும் சினிமா பக்கம் திரும்பியுள்ள இயக்குனர் பாலா நடிகர் சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்தார். தன்னை சினிமாவில் அடையாளம் காட்டிய நபர் பாலா என்கிற நன்றி உணர்வுடன் அவருக்கு உதவும் வகையில், பாலா இயக்கும் படத்தை தனக்கு சொந்தமான 2D இண்டெர்னஷனல் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்து வருகிறார் சூர்யா.

இயக்குனர் பாலா படப்பிடிப்பு தளத்தில் மிக கொடூரமாக நடந்து கொள்கின்றவர் என்கிற விமர்சனம் உண்டு, மேலும் சேது படத்தில் எப்படி இருந்தாரோ, அதே போன்று தான் தற்பொழுது வரை பாலா இருந்து வருவதாகவும், அவரது நடவடிக்கைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் பாலாவின் கொடூர குணம் தெரிந்து தான் அவருடைய படத்தில் மீண்டும் நடிங்க ஒப்பு கொண்டார் சூர்யா, ஆனாலும் பாலாவின் நடவடிக்கைகள் தற்பொழுது மாற்றம் அடைத்திருக்கும் என்கிற ஒரு எண்ணமும் சூர்யாவுக்கு இருந்துள்ளது.

இந்நிலையில் புதிய படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது. சுமார் 35 நாட்கள் வரை நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவை படாத பாடு படுத்திவிட்டார் பாலா என்று கூறப்படுகிறது. படத்தின் நடிகை கிரித்தி ஷெட்டி மற்றும் நடிகர் சூர்யா இருவரும் ஓடுவது போன்ற காட்சி காலையில் தொடங்கி மதியம் வரை எடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்த காட்சி மீண்டும் மீண்டும் ரீ-டேக் எடுக்கப்பட்டு வந்துள்ளனர்.

நடிகர் மற்றும் நடிகை இருவரையும் மீண்டும் மீண்டும் ஓட விட்டு கொண்டே இருந்துள்ளார். அந்த நடிகை எந்த ஒரு சோர்வும் இல்லாமல் ஓடி கொண்டே இருந்துள்ளார். ஆனால் சூர்யாவால் ஒரு கட்டத்தில் ஓட முடியவில்லை, இதனை தொடர்ந்து உதவி இயக்குனர்களிடம் சார், என்ன சார் இது சீக்கிரம் ஓகே சொல்ல சொல்லுங்க என்னால் முடியல, ஒரு காட்சிகாக எங்களை வாட்டி எடுக்கலாமா.? என்று பரிதாபமாக கேட்டுள்ளார் சூர்யா என்று கூறப்படுகிறது.

இதை உதவி இயக்குனர் நேரடியாக சென்று பாலாவிடம் தெரிவித்துள்ளனர், அப்போது பாலா அருகில் படத்தின் நடிகை கீர்த்தி ஷெட்டி இருந்துள்ளார், சற்று தள்ளி நடிகர் சூர்யா இருந்துள்ளார், அப்போது ஏன் இந்த பொம்பள பிள்ளை திரும்ப திரும்ப ஒட்டுது, அவரால் ஓட முடியாத என நடிகையுடன் சூர்யாவை ஒப்பிட்டு பாலா அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது சூர்யா காதிலும் விழுந்துள்ளது, படக்குழுவினர் மத்தியில் சூர்யாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து பேக் அப் என்று தெரிவித்துவிட்டு சூர்யா புறப்பட்டு சென்னை சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்பு தற்பொழுது பாலா மற்றும் சூர்யா இடையே சமரசம் செய்து வைக்கப்பட்டு மீண்டும் விரைவில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

அண்ணே….மன்னிச்சுடுங்க…. பாலாவிடம் சரண்டரான சூர்யா..! இருவருக்கும் இடையில் நடந்தது என்ன தெரியுமா.?