திருமணத்திற்கு முன்பே குழந்தை ரெடி… நயன்தாராவுக்கு நான்கு மாதத்தில் குழந்தை பிறந்தது எப்படி தெரியுமா.?

0
Follow on Google News

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் ஏழு வருடங்களாக காதலித்து திருமணத்திற்கு முன்பே இருவரும் ஒன்றாக கணவன் மனைவியாக லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர், அதே நேரத்தில் நயன்தாராவுக்கு ஒரு பாதுகாவலராக, மேனேஜராக, உதவியாளராக என நயன்தாராவின் நிழலாக விக்னேஷ் சிவன் செயல்பட்டு வந்தார்.

ஏழு வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி விரைவில் திருப்பதியில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், திருப்பதியில் போதிய வசதியின்றி மேலும் கோவில் தேவஸ்தானம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததை தொடர்ந்து, கடந்த ஜூன் 9ஆம் தேதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சென்னை மகாபலிபுரம் அருகே முக்கிய பிரமுகர் மட்டும் பங்குபெறும் வகையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர், தாய்லாந்து சென்று அங்கே தனி தீவில் ஹனிமூன் கொண்டாடினர். ஹனிமூன் முடித்துவிட்டு ஷாருகான் ஜோடியாக நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார், விக்னேஷ் சிவன் அடுத்து அஜித்தை வைத்து இருக்கும் புதிய படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நயன்தாரா அடுத்தடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று மீண்டும் இரண்டாவது ஹனிமூன் கொண்டாட பிரான்ஸ், ஸ்பெயிண்ட் போன்ற நாடுகளுக்கு கணவர் விக்னேஷ் சிவன் உடன் பறந்தனர் நயன்தாரா. இந்நிலையில் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவில் நயன்தாரா இருக்கிறார், அதனால் இனி படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் அக்டோபர் 9ஆம் தேதி நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டார் விக்னேஷ் சிவன். வாடகை தாய் மூலம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா குழந்தை பெற்றுக் கொண்டாலும் கூட, திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு எப்படி குழந்தை பிறக்கும் என்ற பல்வேறு சந்தேக கேள்விகள் எழுந்து வந்தது.

இந்த சந்தேகத்திற்கு மூன்று புள்ளி வைக்கும் வகையில், இது குறித்து தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணத்திற்கு முன்பே நயன்தாரா உடல் நிலையை கருத்தில் கொண்டு வாடகை தாய் மூலமே தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்துள்ளன.

அந்த வகையில் திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு அதற்கான முயற்சிகளும் இறங்கிய நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும், மருத்துவர் மூலம் வாடகைக்கு தாயை தயார் செய்து, அந்த வாடகை தாயின் கருப்பையில் கரு பொருட்படுத்தப்பட்டு குழந்தையை ஆரோக்யமாக வளர்வதை உறுதி செய்துள்ளனர். இதன் பின்பு அடுத்த சில மாதங்களில் விரைவில் தங்களுக்கு குழந்தை பிறக்கப் போகின்றது என்கின்ற மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர்.

இந்நிலையில் அவர்கள் எதிர்பார்த்தது போன்றே திருமணம் ம நான்கு மாதங்களில் மாதங்களில் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பே சில மாதங்களுக்கு முன்பே நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர், வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு தான் திருமணம் செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.