தனுஷ் மீது கோபம்…. இரண்டு குழந்தைகளை அம்போ’ன்னு விட்டு வந்த ஐஸ்வர்யா.! எங்கே தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்து ஒரு மாதம் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மீண்டும் இணைந்து விடுவார்கள் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை, இந்நிலையில் இந்த பிரச்சனையில் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான நடிகர் ரஜினிகாந்த் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த படத்தில் நடிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி சில காலம் பேசாமல் இருந்து பின் ஓன்று சேர்ந்து விடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கு இருந்த வந்த சிறு சிறு பிரச்சனை கடந்த ஆறு மாதமாக உச்சகட்டத்தை அடைவதற்கு காரணம் அமெரிக்காவில் நடந்த இருவருக்குமான பிரச்சனை தான் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார் தனுஷ். ஆனால் இதற்கு ஐஸ்வர்யா விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து படப்பிடிப்பு முடிந்து அப்பா தனுஷ் ஓய்வில் இருப்பதால், இரண்டு மகன்களும் வெளியே சுற்றுலா செல்ல நச்சரித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா வரவில்லை என்றாலும், இரண்டு மகன்களுடன் அமெரிக்க சென்றுள்ளார் தனுஷ்.

அமெரிக்காவில் இருந்து அம்மா ஐஸ்வர்யாவுக்கு தொலைபேசியில் பேசிய மகன்கள், அங்கே மகிழ்ச்சியாக இருப்பதை தெரிவித்து, நாங்க உங்களை மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உடனே ஐஸ்வர்யா அமெரிக்கா சென்றுள்ளார். சுமார் மூன்று நாட்கள் இரண்டு மகன்கள், தனுஷ், ஐஸ்வர்யா என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளனர். இதன் பின்பு ஐஸ்வர்யா – தனுஷ் இடையே மீண்டும் சிறு சிறு சண்டை ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் இரண்டு மகன்கள் முன்பு இருவருக்கும் சண்டை உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து, என்னடா இது சந்தோசமாக இருக்கலாம் என சுற்றுலா வந்தால் அம்மா – அப்பா இருவரும் இங்க வந்தும் இப்படி சண்டையிடுகிறார்களே என வருத்தத்துடன் இருந்துள்ளார்கள் இரண்டு மகன்கள். இதன் பின்பு அடுத்த நாளே இந்தியாவுக்கு திரும்ப முடிவு செய்து ஐஸ்வர்யா கிளம்பிய போது தனுஷ் சமாதானம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பிடிவாதமாக இந்தியா திரும்புவதில் உறுதியாக இருந்துள்ளார். அமெரிக்காவில் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஐஸ்வர்யா கிளம்பிய போது இரண்டு மகன்களும், அம்மா கையை பிடித்து போக வேண்டாம் என கேட்டுள்ளனர், ஆனால் அதற்கு ஐஸ்வர்யா கண்டுகொள்ளாமல் இரண்டு மகன்களையும் தந்தை தனுஷிடம் அம்போ என விட்டுவிட்டு இந்தியா வந்ததாக கூறப்படும் நிலையில், இதன் பின்பு தான் தனுஷ் -ஐஸ்வர்யா இடையே உள்ள சண்டை உச்சகட்டம் அடைய தொடக்கியதாக கூறப்படுகிறது.