தனுஷ்க்கு போட்டியா தன்னுடைய பாய் பிரெண்டை பகிரகமாக அறிவித்த ஐஸ்வர்யா…யார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இடையில் கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு அந்த நிலையில், கடந்த ஜனவரி 17ஆம் தேதி நள்ளிரவு இருவரும் ஒருமனதாக பிரிவதாக அறிக்கை வெளியிட்டு தற்போது வரை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பிரிவுக்கு பின்பு சட்டப்படி விவாகரத்து பெறுவதற்கு இரண்டு தரப்பில் இருந்தும் எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை.

இந்த நிலையில் தனுஷ் தன்னுடைய கேர்ள் பிரண்டை பகிரங்கமாக அறிவித்த அடுத்த சில நாட்களிலே, அவருக்கு போட்டியாக தன்னுடைய பாய் பிரண்டை ஐஸ்வர்யா அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், அந்த படத்தில் நடித்த நடிகை நித்யாமேனன் ஒரு தனித்துவமான திறமையாளர்.

இவருடன் இணைந்து அதிக படங்கள் நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். என் வாழ்க்கையில் இப்பொழுது நித்யாமேனன் ஒரு சிறந்த தோழி என பகிரங்கமாக அறிவித்தார். தனுஷ் இப்படி நித்யாமேனன் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, கீழே நித்யாமேனன் அருகில் தனுஷ் இளைய மகன் லிங்கா அமர்ந்திருந்தார். மேலும் சமீப காலமாகவே நித்யாமேனன் உடன் தனுஷ் மகன்கள் நெருங்கி பழகுவதாக தகவல் வெளியானது.

தனுஷ் தனது பெண் தோழியை அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே, அதற்கு போட்டியாக தனுஷ் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா தன்னுடைய பாய் பிரண்டை பகிரங்கமாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவர் தெரிவித்ததாவது.

இவர் தான் என்னுடைய ஆண் நண்பர், என்னுடைய உடல் மிகவும் பிட்னஸ் ஆக இருக்க முக்கிய காரணம் என்னுடைய பாய் பிரண்டு தான். அவருடைய ஆலோசனை படியும், அறிவுரை படியும் நான் கட்டுக்கோப்பாக, ஒல்லியாகவும் இருக்கிறேன். அவருடைய ஆலோசனைப்படி ஒர்க்அவுட் செய்கிறேன்,அதனால் நான் அழகாக ஸ்லிம்மாக இருக்கிறேன்.

அது மட்டும் இல்லை என்னுடன் அவர் தினமும் சைக்கிளிங் வருகிறார். மூன்று கிலோ மீட்டரில் ஆரம்பித்து இப்பொழுது தினமும் 10 கிலோமீட்டர் நானும் என்னுடைய பாய் பிரண்டு சைக்கிளிங் செய்கின்றோம் என தன்னுடைய ஆண் நண்பரை பகிரங்கமாக அறிமுகம் செய்துள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

வருமான வரித்துறை வலையில் ஜோதிகா… காப்பாற்ற துடிக்கும் கணவர் சூர்யா என்ன செய்துள்ளார் தெரியுமா.?