சூரி கனவில் மண்ணை அள்ளி போட்ட விஜய்சேதுபதி… மகனையும் களம் இறக்கிய விஜய் சேதுபதி..!

0
Follow on Google News

கடும் போராட்டத்திற்குப் பின்பு சினிமாவில் காமெடி நடிகராக வாய்ப்பு பெற்று ,தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடியனாக நடித்து பிசியான காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சூரி. சினிமாவில் சம்பாதித்த பணத்தில் மதுரையில் பல்வேறு இடங்களில் ஹோட்டல் தொழில் செய்து வருகின்றார், மேலும் சென்னையில் உள்ள நடிகை மீனாவின் வீட்டை விலக்கி வாங்கும் அளவிற்கு சினிமாவில் நல்ல வருமானத்தை பெற்று வந்தவர் சூரி.

இந்த நிலையில் காமெடியனாக இருந்த சூரியை விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க வாய்ப்பை கொடுத்தார் வெற்றிமாறன் தனக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்யாமல் ஹீரோ வாய்ப்பு கிடைத்தவுடன் அந்தப் படத்திற்காக உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றிய சூரி, தொடர்ந்து தனக்கு வந்த காமெடி படங்களின் பட வாய்ப்புகளை நான் ரெம்ப பிசி என தவித்து வந்துள்ளார்.

விடுதலைப் படம் வெளியான பின்பு தன்னுடைய சினிமா வாழ்க்கை மிகப்பெரிய மாற்றத்தை தரும் என்கிற நம்பிக்கையில் இருந்து வந்தார் சூரி. இந்நிலையில் சூரியை வைத்து எடுத்து முடித்த விடுதலை படத்தின் காட்சிகளை பார்த்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு திருப்தி இல்லை. சூரியை மட்டும் வைத்து மட்டும் இந்த படத்தை எடுத்தால் வெற்றி பெறாது என்பதால் , விடுதலை படத்தில் விஜய் சேதுபதியை உள்ளே கொண்டு வந்தார் வெற்றிமாறன்.

ஆனால் சூரி நடித்ததை விட அதிக காட்சிகள் விஜய் சேதுபதியை நடிக்க வைத்த வெற்றிமாறன், இதற்கு முன்பு சூரி நடித்த பல காட்சிகளை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை படம் சூரி படம் அல்ல இது விஜய் சேதுபதியின் படமாக மாறியது. இந்நிலையில் விடுதலை படத்தை நம்பி காமெடி வாய்ப்புகளை சூரி தவிர்த்து வந்த நிலையில், அந்த வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டார் யோகி பாபு.

ஹீரோ ஆசை காட்டி என்னை வெற்றிமாறன் மோசம் செய்து விட்டார், அதே போன்று விஜய் சேதுபதி இந்த படத்தில் என்ட்ரி கொடுத்து தன்னுடைய கனவில் மண்ணை அள்ளி போட்டு விட்டார் என்று கடுப்பில் இருந்து வருகிறார் சூரி. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி மகனும் விடுதலை படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்டுகிறது.

இந்நிலையில், ஹீரோ நமக்கு செட்டாகாது என முடிவுக்கு வந்த சூரி, மீதும் முழு நேர காமெடியனாக நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். ஆனால் தற்பொழுது யோகி பாபுவுக்கு மார்க்கெட் உயரத்தில் இருப்பதால், அதிக வாய்ப்புகள் யோகிபாபுவை தேடி செல்கிறது. இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் சூரி என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்தினத்திற்கே நம்பிக்கை இல்லை… பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர் பரிதாபம் என்ன தெரியுமா.?