சிம்புவுடன் இணைகிறார் ஐஸ்வர்யா…. ரஜினிகாந்த் குடும்பத்தினர் பச்சை கொடி..! சோகத்தில் தனுஷ்..

0
Follow on Google News

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் சுமார் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொண்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மீண்டும் குழந்தைகள் நலன் கருதியும், ரஜினிகாந்த் விருப்பதுக்காகவும் இணைந்து வாழ்வார்கள் என கூறப்பட்ட நிலையில், இவர்கள் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என கூறப்படும் நிலையில், இருவரும் அவரவர்கள் திசைகளில் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா கல்லூரியில் படித்து கொண்டிருந்த போதே நடிகர் சிம்புவை காதலித்து வருவதாக கிசு கிசுக்கள் வெளியானது, இவர்கள் காதலிப்பது இரண்டு குடும்பத்துக்கும் தெரியும் என்பதால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூட செய்திகள் வெளியானது. ஆனால் நடிகர் சிம்பு கதநாயனாக அறிமுகமான பின்பு அவர் நடித்த அலை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த திரிஷாவுடன் நெருக்கமாக பழகி வந்தார்.

இது அவர் காதலித்து வந்த ஐஸ்வர்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்த தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிம்பு – ஐஸ்வர்யா காதல் ஜோடி பிரிந்ததாக கூறப்பட்ட நிலையில், அன்று சிம்புவுக்கு போட்டியாக சினிமாவில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்தார் ஐஸ்வர்யா. இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ள ஐஸ்வர்யா.

சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் சண்டையிட்டு பிரிந்து அவருக்கு போட்டியாக இருந்த தனுஷை காதலித்து திருமணம் செய்து சிம்புவை வெறுப்படைய செய்த ஐஸ்வர்யா தற்போது தனுஷ் உடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக அவரை விட்டு பிரிந்துள்ள நிலையில், தனுஷை வெறுப்படைய செய்வதற்காக நடிகர் சிம்புவுடன் இணைந்து அவரை வைத்து தனது புதிய படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா இரண்டு படங்களை இயக்கியுள்ளார், அதில் வை ராஜா வை படம் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் கதையை உருவாக்கி கொடுத்தவர் ஐஸ்வர்யா தான் என கூறப்படுகிறது, இந்நிலையில் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள ஐஸ்வர்யா புதிய கதையை ஓன்று தயார் செய்து சிம்புவை வைத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு கைவசம் இருக்கும் படங்களை முடித்து விட்டு ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் காமிட்டாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தை ஐஸ்வர்யா இயக்கத்தில் கடைசியாக வெளியான வை ராஜா வை படத்தை தயாரித்த AGS கல்பாத்தி அகரம் தயாரிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், ஐஸ்வர்யாவின் இந்த முடிவுக்கு அவருடை தந்தை உட்பட ரஜினிகாந்த் குடும்பத்தினர் பச்சை கொடி கட்டியுள்ள நிலையில்,

இந்த தகவல் அறிந்த தனுஷ் தன்னை வெறுப்படைய செய்வதற்காகவே சிம்புவை வைத்து ஐஸ்வர்யா படம் இயக்க இருப்பதாக சோகத்துடன் இந்த தகவலை தனக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

திருட்டுத்தனம் செய்து சிக்கிய அட்லீ… இந்தியில் இருந்து துரதியடிக்கப்படுகிறார் அட்லீ.. என்ன செய்து மாட்டினார் தெரியுமா.?