சிம்புவுக்கு பொண்ணு கேட்டு போன T ராஜேந்தர் விரட்டியடிப்பு…. எங்கே நடந்த சம்பவம் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சிலம்பரசன் 39 வயதாகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். பல பெண்களை காதலித்த சிலம்பரசன் காதல் நிச்சயம் வரை சென்று கூட தோல்வியை தழுவியுள்ளது. பிரபல சினிமா நடிகர் ஒருவர் மகளை கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்த சிம்பு, சினிமாவில் கதாநாயகனான நடித்த பின்பு தன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகையுடன் அடிக்கடி தனிமையில் லூட்டி அடிக்க அந்த உச்ச நடிகரின் மகள் டாட்டா கட்டிவிட்டு கிளம்பினார்.

இதன் பின்பு வல்லவன் படத்தில் நடித்த போது தன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை நயன்தாரவை காதலித்து வந்தார் சிம்பு. இவர்கள் காதலுக்கு இருவரின் குடும்பத்தினரும் பச்சை கொடி காட்டினார். இதன் பின்பு இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில், திடீரென இந்த காதல் ஜோடி பிரிந்தது. இதற்கு நயந்தாராவை ஏமாற்றிவிட்டார் சிம்பு என கூறப்பட்டது.

காதல் எத்தனை முறை வேண்டுமானால் வரலாம், ஆனால் அது காதலை வரவேண்டும் என பிரபல கவிஞர் ஒருவர் தெரிவித்தது போன்று, எத்தனை முறை காதலில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் காதலிப்பதில் சிம்பு சற்றும் சலைத்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில். முன்றாவது முறையாக நடிகை ஹன்சிகாவை காதலித்தார். இந்த காதல் குறித்து சிம்பு தந்தை T.ராஜேந்தர் வெளிப்படையாக பிரஸ் மீட் ஒன்றில் கூட பேசினார்.

ஹன்சிகா நள்ளிரவில் சிம்பு வீட்டு முன்பு பிறந்தநாள் கொண்டாட, இருவரும் இரவு பார்ட்டிக்கு ஒன்றாக செல்வது என இருந்த சிம்பு – ஹன்சிகா காதலும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் மகள் இலக்கியாவுக்கு திருமணம் செய்து முடித்த கையோடு மகன் சிலம்பரசனுக்கு திருமணம் செய்து விட வேண்டும் என முடிவு செய்து மகனின் மூன்று காதலும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தாலும். பொறுப்பான தந்தையாக மகனுக்கு பெண் பார்க்கும் வேலையை தொடங்கினர் TR.

T.ராஜேந்திரன் சார்ந்த சமூகத்தில் உள்ள முக்கிய நபர்கள் வீட்டுக்கு சென்று மகனுக்கு பெண் கேட்டு வந்துள்ளார் T.ராஜேந்திரன். ஆனால் சிம்புவின் லீலைகள் அறிந்த அந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள், பெண் கொடுக்க முடியாது என விரட்டியுள்ளனர். பல இடங்களில் சினிமா நடிகருக்கு பெண் கிடையாது என நாசுக்கா சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். இருந்தும் விடா முயற்சியில் மகனுக்கு பெண் பார்த்து வந்துள்ளார் T.ராஜேந்திரன்.

ஒரு கட்டத்தில் பெண் வீட்டாரை எப்படி சம்மதம் செய்துவிட வேண்டும் என்பதற்காக, தனது மகன் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளம்,தான் சேர்ந்து வைத்துள்ள சொத்துக்கள். மேலும் தனது மகனை திருமணம் செய்து கொண்டால் சிம்பு மனைவி என்கிற அந்தஸ்து இந்த சமூகத்தில் கிடைக்கும் என மிக பெரிய குடும்பத்தை சேர்ந்த பெண் வீட்டிடம் பேச. அந்த பெண் விட்டார், காசு, பணம் யாருக்குயா வேண்டும், எங்களுக்கு மானம், மரியாதை தான் முக்கியம் என்று, உன் மகனுக்கு பெண் தரமுடியாது என T.ராஜேந்திரன் முகத்தில் அடித்தது போன்று சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மகன் சிம்புக்கு பெண் பார்த்து சலித்து போன தந்தை T.ராஜேந்திரன் ஒரு கட்டத்தில் பெண் பார்க்கும் வேலையை கைவிட்டு விட்டார் என்று கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து தற்பொழுது நிதின் அகர்வாலை சிம்பு காதலித்து வருவதாகவும் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த காதலாவது சிம்புவுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர் சினிமா துறையினர்.

சத்தமில்லாமல் சாதித்த நெப்போலியன்…பலர் வியந்து பார்க்க அமெரிக்காவில் என்ன செய்கிறார் தெரியுமா.?