சமரசம் செய்ய மாமியார் வீட்டு கதவை தட்டிய தனுஷ்..! மாமியார் லதா என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பிரிந்த பின்பு தந்தை ரஜினிகாந்த் விருப்பத்துக்கு ஏற்ப மீண்டும் தனுஷ் உடன் இணைந்து வாழ ஐஸ்வர்யா விரும்பினார், ஆனால் தனுஷ் திட்டவட்டமாக மறுத்து விட்டார். மேலும் ரஜினிகாந்த் குடும்பத்தினர் சமாதான முயற்சியில் ஈடுபட்டதை அலட்சியமாக கருதி புறம்தள்ளி விட்டார் நடிகர் தனுஷ்.

ஒரு கட்டத்தில் எவ்வளவு தூரம் கீழே இறங்கி வந்து பேச முடியுமோ அந்த அளவுக்கு கீழே இறங்கி வந்து ரஜினிகாந்த் குடும்பத்தினர் தனுஷிடம் பேசினார்கள். ஆனால் தனுஷ் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ரஜினிகாந்த் குடும்பத்தினர். இனிமேல் நீயே சமரசம் செய்ய விரும்பினாலும் எங்களுக்கு நீ தேவையில்லை என தனுஷிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு இதன் பின்பு எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என கூறப்படுகிறது.

இதன் பின்பு தான் தனுஷ் மாமியார் லதா ரஜினிகாந்த தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார். தனுஷ் சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அவருக்கு பல்வேறு நெருக்கடியை லதா ரஜினிகாந்த் கொடுக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக பிரபல சினிமா பைனாசியார் மூலம் தயாரிப்பாளருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக. இனி தனுஷ் புதிய படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் பலர் பின் வாங்கியுள்ளனர்.

அதே போன்று தனுஷ் தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்களில், ஒளிப்பதிவாளர் விலகல், கதையாசிரியர் விலகல் தொடர்ந்து இது போன்று அரங்கேறும் சம்பவங்களின் பின்னனியில் லதா ரஜினிகாந்த் இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது வெற்றிமாறன் அந்த படத்தை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இப்படி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள நடிகர் தனுஷ் சினிமா வாழ்கை முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், ரஜினிகாந்த் குடும்பத்தை பகைத்து கொண்டு சினிமாவில் இருக்க முடியாது என்பதை உணர்ந்து, தனது மனைவியின் தங்கையிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்மா லதாவிடம் பேசி சமரசம் செய்ய கேட்டுள்ளார். ஆனால் இனி எனக்கு கால் செய்ய வேண்டாம் என தொலைபேசியை சௌந்தர்யா கட் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேரடியாக மாமியார் லதா ரஜினிகாந்திடம் சமரசம் செய்து சரண்டராகி விடலாம் என திட்டமிட்டு மாமியாரை தேடி போயஸ் கார்டன் சென்றுள்ளார் தனுஷ். இவர் வருகையை எதிர்பாராத வீட்டின் காவலாளி தனுஷ் வந்துள்ள தகவலை லதாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தனுஷ் எதற்காக வந்துள்ளார் என்பதை புரிந்து கொண்ட லதா தற்போதைக்கு பார்க்க முடியாது என காவலாளியிடம் தெரிவித்துள்ளார்.

இதை காவலாளி தனுஷிடம் தெரிவிக்க, அதற்கு அத்தையை 5 நிமிடம் மட்டும் பார்த்து பேசிவிட்டு போகிறேன் என கேட்டுள்ளார். சார் அம்மா கோபமாக இருக்காங்க தயவு செய்து இடத்தை காலி செய்யுங்க, அப்படி இல்லை என்றால் அவங்கள தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளே அனுமதிக்க சொல்லுங்க என காவலாளி தெரிவித்துள்ளார். உடனே தனுஷ் மாமியார் லதா தொலைபேசிக்கு அழைக்க, லதா தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.

பின் காவலாளி அறையில் உள்ள தொலைபேசியை தொடர்பு கொண்டு, தனுஷை அங்கே இருந்து போக சொல்லுங்க, அதான் பார்க்க முடியாது என்று சொல்லியாச்சுல என லதா தெரிவித்துள்ளார். உடனே காவலாளி , சார் அம்மா கோவமாக பேசுறாங்க, தயவு செய்து இங்க இருந்து போங்க என காவலாளி தெரிவிக்க, மாமியார் லதாவை கடைசிவரை காத்திருந்து பார்க்க முடியாமல் திரும்பினார் தனுஷ் என்று கூறப்படுகிறது.

பாலா மனைவி வெளிநாட்டில் கள்ள காதலனுடன் அஜால் குஜால்…. யார் அந்த கள்ள காதலன் தெரியுமா.?