ஐஸ்வர்யா பற்றி தனுஷ் சொன்ன அந்த தகவல் .! கண்ணீர் விட்டு அழுத தனுஷின் தாய், தந்தை.!

0
Follow on Google News

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகளை காதலித்து நடிகர் தனுஷ் திருமணம் செய்த போது. நடிகர் தனுஷ் அதிஸ்டசாலிப்பா.. சூப்பர் ஸ்டார் மகளையே தட்டி தூக்கிட்டார், இனி அவருக்கென்ன கவலை, சினிமாவில் நடித்தால் என்ன, நடிக்கவில்லை என்றால் என்ன, ரஜினிகாந்த் கைவசம் இருக்கும் சொத்து போதாதா, ரஜினிக்கு இரண்டும் பெண் பிள்ளைகள் தான், சொத்தும் அனைத்தும் மருமகன்களுக்கு தான் என பரவலாக பேசப்பட்டது.

ஆனால், தனுஷ் வாழ்க்கையில் நடந்ததோ வேறு, தனுஷ் என்ன செய்தாலும் துருவி துருவி கேள்வி கேட்கும் ஐஸ்வர்யா, தான் என்ன செய்தாலும் கணவன் கண்டுகொள்ள கூடாது கேள்வி கேட்க கூடாது என்பது போன்று தான் தனுஷை வழிநடத்தி வந்துள்ளார். திருமணம் முடிந்த ஆரம்பக்கட்டத்தில், தனுஷ் சினிமாவில் வளரும் நடிகராக தான் இருந்தார், மேலும் அவருக்கும் பொருளாதாரமும் மிக பெரிய அளவில் இல்லாததால் ஐஸ்வர்யாவுக்கு அடங்கி போகும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு, சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகராக தனுஷ் உருவெடுத்த பின்பும் கூட, ஐஸ்வர்யாவை அவரது கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை, மேலும் கணவன் தனுஷ் பணத்தில் ஊதாரித்தனமாக அடிக்கடி வெளிநாடு சென்று ஷாப்பிங் செய்வது, குடியும் கூத்துமாக இருந்த ஐஸ்வர்யா, ஆனால் தனுஷ்க்கு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்.

அதில் தனுஷ் தனது குடும்ப உறுப்பினர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர், அந்த வகையில் தனது தாய், தந்தை, அண்ணன் செல்வராகவன், சகோதரிகள் என அனைவருக்கும் பொருளாதார ரீதியில் உதவி செய்து வருகின்றவர், இது மனைவி ஐஸ்வர்யாவுக்கு சிறிதும் பிடிக்கவில்லையாம், இதனால் அடிக்கடி தனுஷ் உடன் சண்டையிட்டு வந்துள்ளார், மேலும் கணவன் தனுஷ் குடும்பத்தை சேர்ந்தவர்களை சிறிதும் மதிக்கவே மாட்டாராம்.

இதையெல்லாம் சகித்து கொண்டு தான் தனுஷ் இரண்டு குழந்தைகளுக்காக ஐஸ்வர்யா உடன் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் குழந்தைகள் இருவரையும் சிறிதும் கண்டு கொள்ள மாட்டார், தனது சுதந்திரத்தில் கவனமாக இருப்பவர் ஐஸ்வர்யா என கூறப்படும் நிலையில், குழந்தைகள் இருவரும் தாய் பாசத்தில் ஏங்கி பின் தாய் அரவணைப்பு பெரிதும் இல்லாமல் தான் இதுவரை வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில் தனுஷ் தனது குழந்தைங்கள் மீது மிகவும் பாசமாக இருப்பதாக கூறபடுகிறது.

இந்த நிலையில் தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு இருவரையும் இணைத்து வைக்கும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா, ஆனால் தனுஷ் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், தாய் மற்றும் தந்தை இருவரும் சேர்ந்து தனுஷை சமாதானம் செய்து மீண்டும் மருமகள் ஐஸ்வர்யா உடன் இணைந்து வாழ வேண்டும் என்பதற்காக மகன் தனுஷிடம் பேசியுள்ளனர்.

ஆனால் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவால் தான் பெற்ற மன உளைச்சல், மற்றும் தன்னை எப்படியெல்லாம் கட்டு படுத்தி வைத்திருந்தார் என்பது பற்றி சுமார் 30 நிமிடங்கள் வரை பேசிய தனுஷ் இதெல்லாம் ஒரு பத்து சதவிகிதம் தான் உங்களிடம் சொல்லிருக்கேன், முழுவதும் சொன்னால் நீங்க தாங்க மாட்டிங்க என சொன்ன தனுஷ் என்னை தயவு செய்து கட்டாய படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார், தன் மகன் பட்ட கஷ்டங்களை கேட்டும் கண்ணீர் விட்டு தனுஷ் தாய் தந்தை இருவரும் கலங்கியதாக கூறபடுகிறது.

வேதனையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் ரஜினிகாந்த்..! யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது…. நீ யாருடனும் கும்மாளம் போடு….. ப்ளீஸ் என்னை ஏற்று கொள்..கதறும் ஐஸ்வர்யா..! தனுஷ் சொன்ன பதில் என்ன தெரியுமா.?