ஆண் நண்பருடன் தங்கியிருந்த பெங்காலி நடிகை தூக்கிட்டு தற்கொலை.. என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

மேற்குவங்கம் : கொல்கொத்தாவில் பெங்காலி டிவி இளம்நடிகையான ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்வயதிலேயே நடிக்கவந்து தனது திறமையால் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை திடீரென தற்கொலை செய்திருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

பெங்காலி டிவி சீரியல்களான அமீர் சிராஜேர் பேகம், மன்மானே நா ஆகிய இருபெங்காலி டிவி தொடர்களில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை பல்லாபி தே. இந்த 2022 ஏப்ரல் மாதம் வீட்டைவிட்டு வெளியேறிய பல்லாபி கொல்கொத்தாவில் தனியாக ஒரு வீடு எடுத்து தனது ஆண் நண்பரான ஷாக்னிக் சக்ரவர்த்தி என்பவருடன் வசித்துவந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மே 15 தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை கவனித்த அவரது நண்பர் ஷாக்னிக் சக்கரவர்த்தி கடும் அதிர்ச்சியடைந்தார். மேலும் உடனடியாக காவல்துறையினருக்கு தகவலளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு ஆம்புலன்சில் அனுப்பிவைத்தனர்.

நடிகையின் உடல் பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நடிகையின் நண்பரான ஷாக்னிக் சக்ரவர்த்தியை போலீசார் விசாரித்தனர். நடிகையும் அவரும் ஒரே வீட்டில் வசித்துவந்த நிலையில் அவர்கள் இருவரும் காதலர்களா இல்லையெனில் இருவருக்கும் ஏதேனும் வாக்குவாதமா சம்பவம் நடந்தபோது அவர் எங்கிருந்தார் என பலகேள்விகளை போலீசார் அடுக்கினர்.

அதற்க்கு பதிலளித்த நண்பர் நாங்கள் வெறும் நண்பர்கள் மட்டுமே. நான் சிகரெட் வாங்க கடைக்கு சென்றேன். பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது அறையில் அவர் தூக்குமாட்டி தொங்கியிருப்பதை பார்த்தபின்னர் அதிர்ச்சியடைந்து உங்களுக்கு போன் செய்தேன் என பதிலளித்துள்ளார். அவரது வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கீர்த்தி சுரேசையும் விட்டு வைக்காத விக்னேஷ் சிவன்..! நயன்தாரா அதிரடி