அம்மா லதா கொடுத்த ஐடியா… இறுக்கி பிடித்த ஐஸ்வர்யா..! தப்பிக்க முடியமால் சிக்கி கொண்ட தனுஷ்..!

0
Follow on Google News

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்து சுமார் இரண்டு வாரங்கள் ஆன நிலையில் இவர்கள் பிரச்சனை இது வரை ஒரு முடிவுக்கு வராமல் நீடித்து கொண்டே செல்கிறது. தனுஷ் – ஐஸ்வர்யா இடையே பிரச்சனை தொடங்கியதே தனுஷ் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய பின்பு தான் என கூறபடுகிறது. தனக்கு பிடித்த நடிகைகளை தனது தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு கொடுத்து வந்தார் தனுஷ்.

அந்த வகையில் தனுஷ் தயாரிப்பில் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக நடிகைகள் போட்டி போட்டு தனுஷ் உடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தனர். அந்த வகையில் நடிகை அமலாபால், தொலைக்காட்சி தொகுப்பாளினி DD ஆகியோருக்கு தான் சொந்தமாக தயாரித்த படத்தில் வாய்ப்புகள் கொடுத்தார் தனுஷ். தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய பின்பு தான் நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி வந்தார் தனுஷ் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் தனுஷ் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி ஆகிய இந்த இரண்டு படங்களை தவிர மற்ற அணைத்து படங்களும் பொருளாதார ரீதியில் படுதோல்வி அடைந்து பெரும் நட்டத்தை ஏற்பட்டது. இதனால் கடன் சுமைக்கு ஆளானார் தனுஷ், சசிகலா உறவினர் ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் விவேக் ஜெயராமனிடம் மட்டும் சுமார் 80 கோடி வரை தனுஷ் கடன் பெற்றதாக கூறப்டுகிறது. இதனை தொடர்ந்து கடன் சுமையில் பெரும் சிரமத்தில் இருந்துள்ளார் தனுஷ்.

மருமகன் கடனில் இருக்கும் தகவல் அறிந்த ரஜினிகாந்த், தனது மருமகன் தனுஷ் தயாரிப்பில் சம்பளம் வாங்காமல் நடித்த படம் தான் காலா. இந்த படத்தில் கிடைத்த லாபத்தில் தனக்கு இருந்த கடன்களை அடைத்து நிம்மதி பெரு மூச்சு அடைந்த தனுஷ். இதன் பின்பு இனி படம் தயாரிப்பதில்லை என முடிவு செய்து தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடினார். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில்.

இருவரையும் இணைத்து வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் ஐஸ்வர்யா மீண்டும் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்தும், தனுஷ் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.ஐஸ்வர்யா மற்றும் அவரது தாய் லதா பல முயற்சிகளை மேற்கொண்டும் பேச்சுவார்த்தை தோல்வியை தான் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷிடம் இறுதியாக சில கோரிக்கைகளை வைத்துள்ளார் ஐஸ்வர்யா.

அதில் நடிகைகளிடம் குடி கூத்தும் என இருந்துட்டு படம் தயாரிப்பில் கோட்டை விட்டு கடனாளியாக இருந்த போது எங்க அப்பா தான் உதவினார், அவர் மகள் என்னை வேண்டாம் என தனுஷ் முடிவு செய்த பின்பு காலா படத்தில் எங்க அப்பா நடித்ததற்கு, அவருக்கு கிடைக்கவேண்டிய தொகையை தர வேண்டும் என இறுக்கி ஐஸ்வர்யா பிடித்துள்ளதால், எப்படி இவ்வளவு பெரிய பணத்தை கொடுப்பது என தப்பிக்க வழியின்றி சிக்கி கொண்டுள்ளார் தனுஷ் என கூறப்படும் நிலையில், ஐஸ்வர்யாவுக்கு இந்த ஐடியாவை கொடுத்ததே அவரது தயார் லதா தான் என கூறப்படுகிறது.