அசிங்கமாக திட்டிய பாலா… கோபத்தில் சூர்யா என்ன செய்தார் தெரியுமா.?படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு..

0
Follow on Google News

இயக்குனர் பாலா அதிகம் கோப பட கூடிய நபர், இவர் ஒரு சைக்கோ இயக்குனர் என்று கூட சினிமா வட்டாரத்தில் அழைப்பார்கள், பாலாவின் குணத்துக்கு ஏற்றார் போன்று, அவருடைய படைப்புகளும் மிக கொடூரமாக இருக்கும். ஆனால் மக்கள் வியந்து பார்க்கும் வகையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பாலாவின் படைப்புகள், நடிகர் விக்ரம் மற்றும் சூர்யா என்கிற நடிகரை தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டியவர் இயக்குனர் பாலா.

சமீபத்தில் இயக்குனர் பாலா மற்றும் அவரது மனைவி முத்துமலர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பாலா அவரது மனைவிக்கு இடையில் கடந்த நான்கு வருடமாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பாலா சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் கடைசியாக அவரது இயக்கத்தில் வந்த படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியது, இது பாலா ரசிகர்களுக்குக்கு மிக பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்நிலையில் தற்பொழுது மனைவி முத்துமலரை விவாகரத்து பெற்று தனது முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்த தொடங்கிய பாலா, புதிய படத்துக்கான வேலையையும் தொடங்கினர். இதில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் நடிக்கிறார்கள், இந்த படத்தை சூர்யா சொந்தமாக தயாரிக்கிறார், பாலாவின் புதிய படம் கன்னியாகுமரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது படத்தின் பெரும்பாலான காட்சிகள் கடலில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படம் தொடங்குவதற்கு முன்பு நடிகர் சூர்யா சில கண்டிசன்களை போட்டுள்ளார் அதாவது, மிக குறுகிய காலத்துக்குள் இந்த படத்தை எடுத்து முடிக்க வேண்டும், தனக்கு அடுத்தடுத்து படங்கள் இருப்பதால் மற்ற பாலா படங்கள் போன்று அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தாமல், குறிப்பிட்ட இந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என சூர்யா தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் சூரரை போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவை அசோசியேட் இயக்குனராக இந்த படத்தில் நியமித்துள்ளார் சூர்யா.

தன்னால் சினிமாவில் அங்கீகாரம் பெற்ற சூர்யா, தற்பொழுது தனக்கே கண்டிஷன் போட்டு நடிக்கும் நிலையை நினைத்து பாலாவுக்கு சிறிய வருத்தம் இருந்தாலும், மீண்டும் சினிமாவில் தன்னுடைய படைப்பு பேச வேண்டும் என்பதர்க்காக அனைத்தையும் சகித்து கொண்டு புதிய படத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பின் போது ஒரு சில காட்சிகளை சூர்யா மாற்றம் செய்ய வலியுறுத்தியதாக சுதா கொங்காரா மூலம் பாலாவுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பாலா அதற்கு ஒப்பு கொள்ளவில்லை, தொடர்ந்து நடைபெற்ற படப்பிடிப்பில் சூர்யா மீது சிறு சிறு அதிருப்தியில் இருந்து வந்த பாலா, சில நேரங்களில் கோபத்தில் நேரடியாக சூர்யாவை திட்டமுடியாமல், மற்ற ஆர்டிஸ்ட்களை சரமாரியாக திட்டியுள்ளார், பாலா ஒவ்வொரு முறையில் மற்ற ஆர்ட்டிஸ்களை திட்டும் போதும் அருகில் சூர்யா இருந்து வந்துள்ளார். பாலா தன் மீது உள்ள கோபத்தை தான் மற்ற ஆர்டிஸ்ட்கள் மீது வெளிப்படுத்துகிறார் என்பதை சூர்யா நன்கு உணர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி மற்ற ஆட்டிஸ்ட்களை திட்டுவது தன்னை தான் என்பதால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சூர்யா பேக் அப் என்று தெரிவித்துவிட்டு படப்பிடிப்பில் இருந்து கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெரும்பாலன படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், மீதி படத்தை எடுத்து முடிக்க சூர்யா மற்றும் பாலா இடையில் சமரசம் செய்து வைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

ஓசில நடித்தால் கூட வேண்டாம்… நயன்தாரா விரட்டியடிப்பு…! பறிபோகும் பட வாய்ப்பு.. ஏன் தெரியுமா.?