பாடல் வெளியிட்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா.? என்ன திமிரு சூர்யாவுக்கு …பகையை மறக்காமல் வெச்சு செய்ய காத்திருக்கும் வட மாவாட்டம்..

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் அவரது மனைவி ஜோதிகா தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜெய்பீம், இந்த படத்தில் வன்னிய சமூகத்தை தவறாக சித்தரித்ததாக நடிகர் சூர்யாவுக்கு எதிராக வன்னிய சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், இந்த விவகாரத்தில் வருத்தம் கேட்டு, அல்லது மன்னிப்பு கேட்டு சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும் ஆனால் தான் செய்த தவறை நியாயப்படுத்தி தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தார் சூர்யா.

இது பாமக மற்றும் வன்னிய சமூகத்தினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பாமக இடையில் பெரும் பிரச்சனையாக வெடித்த போது வட மாவட்டத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பாபா படம் திரையிடப்பட விடாமல், ரஜினிக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்படும் வகையிலும் இனி யாராவது வன்னியர்கள் மற்றும் பாமகவை சீண்டினால் இது தான் என எச்சரிக்கும் வகையில் சம்பவங்கள் அரங்கேறியது.

இப்படி பெரும் சம்பவங்களை அரங்கேற்றிய வன்னிய சமூகம் மற்றும் பாமகவினர் நடிகர் சூர்யாவுக்கு தக்க பதிலடி நிச்சயம் கொடுப்போம் என பகையுடன் காத்திருக்க, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் நேற்று நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய படத்தின் பாடல் ஓன்று வெளியாகி உள்ளது. அந்த பாடலில் இடம்பெற்ற வரிகளில், பொறுத்து பொறுத்து நீ பொறுமைக்கு, இறையாகி போகாத வேணா…. பொருத்தி போட்டதும்…..பொறியாகி வெறியாக வேணுமடா தானா..என்றும்,

மேலும், ஈட்டி போல பாயுறவங்கிட்ட போட்டியிலாம் இனி வேணுமா…..தீட்டி வெச்ச கூட்டம் உண்டு கூட
எதற்கும் துணிஞ்சவன் தானம்மா…நமக்கொரு பாதை ஹே, அவசியம் தேவை என இடம் பெற்ற பாடல் வரிகள் சமீபத்தில் ஜெய்பீம் படம் விவகாரத்தில் வன்னியர்கள் மற்றும் சூர்யாவுக்கு இடையில் நடந்த பிரச்சனைக்கு பதிலடியா என பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சூர்யா ரசிகர்கள் எங்க தலைவரின் பதிலடி இப்படி தான் இருக்கும் என பாமக மற்றும் வன்னியர்களை சீண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கு பாமக மற்றும் வன்னிய சமூகத்தினர், சூர்யாவை செருப்பால் அடிக்காமல் விடமாட்டோம்… வன்னியர்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா என்றும், உனக்கு என்ன திமிருடா.. படம் ரிலீஸ் ஆகும் போது தெரியும் நாங்கள் யார் என நடிகர் சூர்யா டிவீட்டர் பக்கத்தில் பாமக மற்றும் வன்னிய சமூகத்தினர் பதில் பதிவு செய்து வருவது குறிப்பிடதக்கது.

டேய்…தம்பி சூர்யா ..இனி உன் படம் தியேட்டரில் ஓடாது… புரட்சி பேசும் நடிகர்கள்… மீடியா… பேடிகள் எங்கே.?