ஒமிக்ரான் வைரஸ் தொற்று… மும்பையில் 144 ஊரடங்கு!

0
Follow on Google News

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து 144 ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மூன்றாவது முறையாக உருமாறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் முதலாக தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுவரை அந்த வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் 25க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 17 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மும்பையில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.