போயஸ் கார்டனில் இரண்டு அபார்ட்மெண்ட்கள் வாங்கிய நயன்தாரா!

0
Follow on Google News

சென்னையின் ஹாட் சிட்டியான போயஸ் கார்டனில் இரண்டு விலை உயர்ந்த அபார்ட்மெண்ட்களை வாங்கியுள்ளார் நயந்தாரா. நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக் சில வருடங்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

அவரின் படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை பெற்று வருகின்றன. வரிசையாக பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இதற்கிடையில் தனது காதலரை எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விரைவில் அவர்களின் திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. திருமணத்துக்குப் பின்னர் நயன்தாரா தங்குவதற்காக சென்னையின் ஹாட் பகுதிகளில் ஒன்றான போயஸ் கார்டனில் இரண்டு அபார்ட்மெண்ட்களை 18 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளாராம். விரைவில் அங்கு நயன்தாரா குடியேற உள்ளதாக சொல்லப்படுகிறது.