நானும் ரௌடிதான் படத்துக்குப் பின் நயன்தாரா துணிந்து எடுத்த முடிவு… காதலர்தான் காரணமாம்!

0
Follow on Google News

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்காக நயன்தாரா சொந்தமாக டப்பிங் பேசவுள்ளார்.
நயன்தாரா தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் மலையாள படங்கள் தவிர்த்து மற்ற படங்களுக்கு சொந்தமாக டப்பிங் பேசியதில்லை. விதிவிலக்காக நானும் ரௌடிதான் படத்தில் தனக்குதானே டப்பிங் பேசினார். மற்ற படங்களில் எல்லாம் நயன்தாராவுக்கு தீபா வெங்கட்தான் டப்பிங் பேசி வருகிறார்.

இந்நிலையில் இப்போது தன்னுடைய காதலர் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு மீண்டும் தானே டப்பிங் பேசியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை இணையத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.