விஜய் சேதுபதி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மகாகாந்தி!

0
Follow on Google News

விஜய் சேதுபதியை பாராட்டிய போது தன்னை இழிவான வார்த்தைகளில் திட்டியதாக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சமீபத்தில் மஹா காந்தி என்பவர் பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை எட்டி உதைத்ததாக சர்ச்சையில் சிக்கினார்.

அது சம்மந்தமான வீடியோ காட்சியும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. இந்த விவகாரம் கடந்த சில தினங்களாக அனைந்திருந்த நிலையில் இப்போது மகா காந்தி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

விஜய் சேதுபதியை தான் பாராட்டி பேசியதாகவும், ஆனால் அவர் தன்னை இழிவான வார்த்தைகளால் திட்டி பேசியதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். மஹா காந்தியின் இந்த செயல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.