நீங்க தான சொன்னீங்க…வெட்கமாக இல்லையா உங்களுக்கு.? என்னா உருட்டுடா சாமி..! முக்குடைபட்ட சேரன்.. ! இந்த அவமானம் தேவையா.?

0
Follow on Google News

புதிய படம் வெளியானதும், அந்த படம் குறித்து ரிவியூ தருபவர்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, திரைப்படத்தை விமர்சனம் செய்யலாம், ஆனால் அதை மனிதநேயத்துடன் விமர்சனம் செய்ய வேண்டும். இப்ப ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தால் அதை ஊரெல்லாம் கொட்டடித்து சொன்னால் எப்படி இருக்கும்.? நல்லா படிங்க தம்பி, நல்லா படிச்சி இருக்கலாமே, ஏன் மார்க் கம்மியா வாங்கிட்டாங்க அப்படின்னு சொல்லி இருந்திருக்கலாம் அதுவும் ஒரு ரிவியூ தான.

நீ எல்லாம் எதுக்கு படிக்க வந்த? உனக்கெல்லாம் மார்க் தேவையா? வீட்ல படுத்து தூங்கலாமே, ஏன் படிக்க வந்த?என இப்படி பேசினால், ஒருத்தன் செத்துருவான், அப்படி யாரையும் கொல்லக் கூடாது. அவன் தகுதிக்கு அவன் செய்கிறான், நீ புத்திசாலியா இருந்துட்டு போ, அவன் அறிவுக்கு அவன் செய்கின்றான். அவன் வாழ்க்கை அவனுக்கு, எல்லாருமே உன்னுடைய லெவலுக்கு இருக்க முடியுமா.? நீதியில் தவறு இருக்கும்போது,

மேலும், இந்த சமூகத்திற்கு தவறிழைக்கும் போது, நீ வார்த்தையால் வெட்டி சாய்த்துவிடு அதில் தவறில்லை, தவறான படமெடுக்கும்போது காசுக்காக நீ என்ன வேண்டுமானலும் செய்வியா என விமர்சனம் செய்தால் தவறில்லை. மற்றபடி அவன் அறிவுக்கு ஒரு படம் எடுக்கும்போது ரொம்ப தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது,அது கொள்வது போன்று. கொள்வது என்றால் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க அவனுடைய நம்பிக்கையை கொள்வதே சாவு தான.

அந்த படத்தை நம்பி தயாரிப்பாளர், இயக்குனர் , கேமரா மேன், லைட் மேன், என இந்த படத்துக்கு பின்பு அடுத்த மூன்று படத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருப்பவர்களை கொலை செய்வது தான் இது போன்ற விமர்சனம். மனிதாபிமானத்துடன் ரிவியூ கொடுக்க வேண்டும் என நடிகர் விஜய் ஆண்டனி பேசிய வீடியோவை தனது டிவீட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குனர் சேரன் கருத்து தெரிவித்துள்ளது தான் தற்போது அவருக்கு எதிராக வெடித்துள்ளது.

சேரன் தனது பதிவில், அருமையாக சொன்னீங்க விஜய் ஆண்டனி சார், நீங்கள் சொல்லும் வலிகள் புரிய அவர்கள் காதுகளையும் மனதையும் திறந்து வைத்திருக்க வேண்டும்.. நேர்மையற்றவர்களின் மனதை அசைத்துப்பார்க்கும் மிக நேர்த்தியான பதில் .. அசைந்தால், வலிகள் புரிந்தால் மகிழ்ச்சி..என சேரன் பதிவுக்கு. புதிய திரைப்படங்களை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்து வரும் புளு சட்டை மாறனை சமீபத்தில் நேரில் சந்தித்து சேரன் பாராட்டிய புகைப்படத்தை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள்.

புளு சட்டை மாறனை கூட நம்பலாம் உங்களமாதிரி ஆளுங்களதான் நம்பகூடாது என்னா உருட்டுடா சாமி என நெட்டிசன்கள் சேரனுக்கு எதிராக பதில் அளித்து வருகின்றனர். மேலும், மாறன் மாதிரி ஆட்கள் தானே காரணம் அவனுக்கு பொன்னாடை போர்த்தும் போது மட்டும் இனிச்சிசோ… இப்போ அழுது ஒன்னும் ஆகாது. எப்படி வெட்கமே இல்லாமல் இப்படி கேவலமா விமர்சனம் பன்றவனையும் போய் பாக்கறது அப்பறம் இப்படியும் பேசறது நெட்டிசன்களின் தரமான பதிலடியால் முக்குடைபட்டு சேரன் பதில் கூற முடியாமல் இருப்பது குறிப்பிடதக்கது.