நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி….கொரோனா சோதனை!

0
Follow on Google News

நடிகர் சிம்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் சிம்பு மாநாடு படத்தின் அமோக வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார். இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதையடுத்து பத்து தல, கொரோனா குமார் என வரிசையாக படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கோவிட் 19 சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் முடிவில் நெகட்டிவ் என வந்துள்ளது. இதையடுத்து அவர் உடல்நலம் தேறியதும் இன்று இரவு அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என சொல்லப்படுகிறது.