இனி ஏ பி சி செண்டர் என பிரிக்கமுடியாது… மாநாடு வெற்றி குறித்து சிம்பு கருத்து!

0
Follow on Google News

மாநாடு படத்தின் இமாலய வெற்றி பல இயக்குனர்களுக்கும் ஊக்கம் அளித்துள்ளது என சிம்பு பேசியுள்ளார். சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா மற்றும் எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்த படம் பல பிரச்சனைகளைத் தாண்டி நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது. ரிலிஸ் ஆனதில் இருந்து வசூல் குறையாமல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றி படக்குழுவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று டிவிட்டர் ஸ்பேஸஸில் நடந்த கலந்துரையாடலில் படக்குழுவினரோடு படத்தின் நாயகன் சிம்புவும் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ‘ஒரு நல்ல கதையை சொன்னால் அது ரசிகர்களின் ஒரு தரப்புக்கு மட்டுமே பிடிக்கும் என இனி சொல்ல முடியாது. மாநாடு படத்தின் வெற்றி ஒரு மைல்கல். இனிமேல் ஏ பி சி என செண்டர் வாரியாக ரசிகர்களை பிரிக்க முடியாது. அதற்கான காலம் முடிந்துவிட்டது’ எனப் பேசியுள்ளார்.