என்ன ஆனாலும் சரி சூர்யா படத்தோடு மோதியே தீருவேன்… ஹரி எடுத்த முடிவு!

0
Follow on Google News

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.
சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள ஜெய் பீம் படத்தால் அவரின் அடுத்த படமான எதற்கும் துணிந்தவன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தில் பொள்ளாச்சி சம்பவம் பற்றிய காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுவதால் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் பிப்ரவரி 3 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறது சன் பிக்சர்ஸ்.இந்நிலையில் சூர்யா நடிப்பில் அருவா படத்தை இயக்க இருந்த இயக்குனர் ஹரி அது கைவிடப்பட்டதால் சூர்யாவின் மீது கடுப்பில் இருப்பதாக சொலல்ப்பட்டது.

மேலும் அருவா கதையைதான் அருண் விஜய்யை வைத்து யானை என்ற பெயரில் இயக்கியுள்ளார். அதனால் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரிலிஸ் ஆகும் அதே நாளில் தன்னுடைய யானை படத்தையும் ரிலீஸ் செய்யவேண்டும் என்கிற முடிவில் உறுதியாக இருக்கிறாராம்.