கணவருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஸ்ரேயா: கோவிலுக்கு வெளியே செஞ்ச காரியத்தால் புதிய சர்ச்சை

0
Follow on Google News

ரஜினி, விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் கடந்த மார்ச் 12-ந் தேதி ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ஆண்ட்ரெய் கோச்செவ்வை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நேற்று ஸ்ரேயா தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வருகை தந்திருந்தார்.

இருவரும் விஐபி பிரேக் தரிசனத்தின் போது சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து இவர்களுக்கு ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்தம், பிரசாதங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன்பின் கோவிலுக்கு வெளியே வந்த இவர்களை பார்த்ததும், ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுத்தனர்.

அப்போது, ஸ்ரேயாவுக்கு அவரது கணவர் ஆண்ட்ரெய் கோச்செவ் முத்தம் கொடுத்தார். இது தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புனித தலமாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பு கணவன்-மனைவி இருவரும் முத்தம் கொடுப்பது அந்த தலத்தை அவமானப்படுத்துவது போலாகும் என்று ஒருசிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இது இப்போது புதிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவிலுக்கு வெளியே பேட்டி கொடுத்த ஸ்ரேயா, தற்போது ராஜமவுலி இயக்கத்தில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளதாகவும், பல மொழிகளில் வெளியாகவுள்ள ‘கமனம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளதாகவும், இரண்டும் கூடிய விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.